ராஜபாளையம் பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர்மழையின் காரணமாக விவசாயிகள், விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நெல் சாகுபடியில் - ஈடுபட்டு வரும் விவசாயிகள், போதிய மழை இல்லாததாலும், கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் விவசாய பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
கடந்த மாதம் பெய்த தொடர்மழையின் காரணமாக ஊருணி, கண்மாய் உள்படநீர்நிலைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ராஜபாளையம் நகர்மற்றும்அதன்சுற்றுவட்டார கிராமங்களில்தற்போதுவிவசாயபணிகள் நடைபெற்றுவருகின்றன.கருங்குளம், கடம்பன்குளம், கொண்டனேரி, தெற்கு வெங்காநல்லூர், கொல்லம்கொண்டான், நக்கனேரி, சேத்தூர், முகவூர், சுந்தரராஜபுரம், கணபதி சுந்தரநாச்சியார்புரம், புத்தூர், நல்ல மங்கலம், மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண் டான், முதுகுடி ஆகிய ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் வயல்களைசீரமைக்கும் பணி, உழவு பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாற்று நடவு பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பறவைகள் வயல்களில் மேயும்போது அதன் எச்சத்தை வயலில் இடுவதால் உரமாக பயன்படுகிறது. விவசாயிகளுக்குதேவையான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்டநிர்வாகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply