தேசிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
மாணவர்களுக்கு கல்வி, நற்பண்புகளை கற்றுத்தரும் ஆசிரியர் பணி கடவுளுக்கு இணையானது என போற்றப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த ராதா கிருஷ்ணன், ஆசிரியர் பணியில் ஈடுபாடு கொண்டவர். அவரது பிறந்த தினமான செப்.5, இந்தியாவில் தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
0
Leave a Reply