25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


1000 கோடி வசூலுக்கு ரஜினிக்கு வில்லனாகும் கமல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

1000 கோடி வசூலுக்கு ரஜினிக்கு வில்லனாகும் கமல்

கமல் நடிப்பில் விக்ரம் படம் மாபெரும் வெற்றியை சந்தித்தது. மேலும் வசூல் ரீதியான வெற்றியை சந்தித்த இப்படத்தைக் கொண்டு லோகேஷ் இயக்கத்தில் ரஜினி படம் நடிக்க ஆசைப்பட்டதாக கூறப்பட்டது. அதை நிறைவேற்றும் விதமாய் லோகேஷ் தற்பொழுது இப்படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.இப்படத்தில் லோகேஷ், ரஜினிக்கு வில்லனாக கமலை நடிக்க வைப்பதாக பேச்சும் எழுந்துள்ளது. தற்போது ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் கமல், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாய் நடித்தாலும் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

 இப்படமே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நண்பனுக்காக இப்படத்தில் கமல் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்பார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் இயக்கம் என்றால் பல எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், தற்பொழுது இப்படத்தில் ரஜினி, கமல் இருவரையும் இணைத்து படம் இயக்க முயற்சித்துள்ளார்.அடுத்த1000 கோடி வசூலிக்க, புதிய யுத்தியை பயன்படுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி என்றால் இது இந்தியாவில் அதிக வசூல் செய்யப்பட்டு முதலிடத்தில் வந்து நிற்கும். மேலும் உலக அளவில் வசூலில் இதுதான் பெரிய படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..அவ்வாறு இது மட்டும் நடந்து விட்டால், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி கண்ட படமாக இவை அமையும் எனவும் கூறப்படுகிறது. ஒரே படத்தில் ஒட்டுமொத்த பிரம்மாண்டத்தையும் படைக்கும் லோகேஷ் கனகராஜின் மதிப்பும் உயர்ந்துவிடும் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News