மாணவர்களுக்கான இலக்கியத் திருவிழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலக்கியத் திருவிழா பள்ளித் தாளாளர் கவிஞர். ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மற்றும் கதை சொல்லியுமான திருமதி. சரிதா ஜோ கலந்து கொண்டார் .அவரை முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்று அறிமுகம் செய்ய, பள்ளித் தாளாளர் திருமதி, ஆனந்தி அவர்கள் சிறப்புப் பரிசினை வழங்கி கௌரவம் செய்தார்.
சிறப்பு விருந்தினர் தனது கதைக் களத்தை ஆடல் பாடலுடன் உற்சாகமாக தொடங்கினார். கதையானது மாணவர்களின் கற்பனைத் திறனையும், அவர்களது வாசிக்கும் பழக்கத்தினையும் வளர்க்கிறது என்று கூறினார். இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாகவும் இருந்தது. கதை கூறும் போதும், கேட்கும் போதும், வாசிக்கும் போதும் மாணவர்கள் தங்களை அந்த கதாபாத்திரமாகவே கருதிக் கொள்வதால் அவர்கள் வெற்றி அடைய முடியும் என்று கூறினார்.
மேலும் அவர் தமது கதையில் வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொழுது மட்டுமே வாழ்க்கை மிகவும் ரசனை மிக்கதாக மாறுகிறது என்பதனை ஒரு சிறிய கதையின் மூலம் எடுத்துரைத்தார். தோற்கும் இடத்திலிருந்து வெற்றியை துவக்க வேண்டும் என்ற கருத்தினை மாணவர்களுக்கு தனது கதையின் மூலம் ஆழமாக பதிவிட்டார். பின்பு ஒரு சிறிய பாடலுடன் தனது உரையை முடித்தார்.ஆசிரியை திருமதி. அழகுராணி நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
0
Leave a Reply