25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நெப்போலியன் மனைவி சுதாவின் 51வது பிறந்த நாளை எளிமையாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நெப்போலியன் மனைவி சுதாவின் 51வது பிறந்த நாளை எளிமையாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்

நடிகர் நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அங்கு தன்னுடைய மனைவி சுதாவின் 51வது பிறந்த நாளை எளிமையாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.அதோடு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குறித்த அந்த பதிவில் சில வார்த்தைகளை நெப்போலியன் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகராக இருந்திருக்கிறார். இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவை" இப்போதும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். ஒல்லியான தேகத்தோடு பெரிய முறுக்கு மீசை வைத்து மிரட்டும் பார்வையால் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனவர்கள் ஏராளம். சின்னத்தாயி, ஊர் மரியாதை, எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தென்காசி பட்டணம், விருமாண்டி என பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த காலகட்டத்தில் சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்துக் கொண்டவர் தான். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கிய நெப்போலியன் திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் தான்.

 அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக அரசியலை விட்டு விலகிய நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர் விவசாயத்தையும் செய்து வருகிறார். அதுபோல நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மீது தீராத காதலோடு இருக்கும் நெப்போலியன் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவியின் 51 வது பிறந்தநாள் பங்க்ஷனை கொண்டாடி அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் நண்பர்களே டிசம்பர் 24 , 2023. எனது மனைவியின் 53வது பிறந்தநாள்.மூத்த சகோதரர் மற்றும்  மைத்துனருடன், எங்கள் குடும்ப நண்பர் வழக்கறிஞர் ஆசிரியரின் இல்லத்தில் கொண்டாடினோம் என்று தகவல் தெரிவித்து இருந்த நிலையில் ,இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதோடு நெப்போலியன் எப்போதும் குடும்பத்தோடு இப்படி பல ஆண்டுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது பலருடைய ஆசீர்வாதமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக கட்டிய மருத்துவமனையில் பல பேர் சிகிச்சை பெற்று நலம் பெற்று வரும் நிலையில் அவர்களும் நெப்போலியனின் மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News