ராஜபாளையம் நகர் பகுதி பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிப்பாளர்களால் போக்குவரத்து நெரிசல்.
ராஜபாளையம் நகர் பகுதி பாதசாரிகளின் பாது காப்பிற்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் சென் றுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை,முடங்கி யார் ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட நகரைசுற்றிலும் செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் பலஆண்டுகளாக முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன.
சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பிற்காகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காகநெடுஞ்சாலைக்கு இடங்கள் அளவீடு செய்யப்பட்டு குறியீடு வரையப்பட்டு,ஆக்கிரமிப்பு சொந்தமான அகற்றும் பணிகள் நடக்காததால் மேலும் புதிதாகமுளைத்துள்ளன.
சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பிற்காகவும் ,வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், அமைக்கப்பட்ட இவற்றை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் ,ரோட்டில் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ,அதிகரித்து வருவதுடன், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. நகர் பகுதிபோக்குவரத்து நெரிசலை சீராக்க நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, வருவாய்துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறனர்.
0
Leave a Reply