95-வது ஆஸ்கர் விருதினை வென்ற சிறந்த ஆவணக் குறும் படம்."THE ELEPHANT WHISPERERS" .
தாயை இழந்த இரண்டு யானைக்கன்றுகளைப் பெற்றோரைப்போலப் பராமரித்து வளர்த்த தென்னிந்தியாவின் முதல் தம்பதியைப் பற்றிய உண்மைச் சம்பவம்தான், இயக்குநர் கார்த்திகி கான்சால்வஸ் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள "The Elephant Whisperers' ஆவணப்படம். இந்தப் படம் இன்று நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறும் படத்துக்கான விருதினை வென்றிருக்கிறது.
காட்டின்பேரழகைப்படம்பிடிக்கும்ட்ரோன்காட்சிகள்,நம்கண்களைஅங்குமிங்கும்சுழலவிடாமல்கட்டிப்போட்டுவிடுகின்றன.பொம்மன் செல்லமாக அழைத்ததும் ரகு தனது குடிசையிலிருந்து வந்து குளிப்பது, அவரோடு ஃபுட்பால் விளையாடுவது, மற்றொரு யானை புல் சாப்பிடுவதைப் பார்த்து அப்படியே தானும் சாப்பிடுவது, ஸ்ட்ரா போட்டு ஜூஸ் குடிப்பது என ரகுவின் குறும்புகளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். பெற்ற பிள்ளையைப்போல் வளர்த்துவிட்டு ரகுவை முகாமில் விடவேண்டும் என்ற சூழல் வரும்போது, இதயத்தைக் கனக்கவைத்துவிடுகிறது அந்த காட்சி, அதுவும், ரகு பிரியும்போது அம்முக்குட்டியின் கதறல்... ரகு திரும்ப ஓடிவருவது எல்லாமே. சகோதரத்துவ சென்டிமெண்ட காட்டின் பேரழகையும் மலையில் தேன் எடுக்கும் காட்சியையும் அப்படியே டெம்பிடித்திருக்கிறார்கள்தென்னிந்தியாவிலேயே, தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளை வளர்க்கும் தம்பதி என்ற பெருமையை அடைந்த பொம்மன் - பெல்லியின் பாசம் நிறைந்த வாழ்வியல், விலங்குகள் மீதான நேசிப்பை அதிகப்படுத்துகிறது.
0
Leave a Reply