25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வனவாழ்வின் உயிர்ப்பும்  ஒளிப்பதிவின் உன்னதமும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வனவாழ்வின் உயிர்ப்பும் ஒளிப்பதிவின் உன்னதமும்

 இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் My experiences in wild lands என்ற தலைப்பில்புகைப்படக் கலை சம்பந்தமான ஒரு அருமையான நிகழ்ச்சிநடைபெற்றது. அற்புதமான அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஒளிப்பதிவாளர்ரமணீதரன் சார் அவர்களும் கிருஷ்ணன் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டனர்.பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் தலைமையேற்கதிருமதி இந்திரா வரவேற்புரை நல்க பள்ளி முதல்வர் திருகோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களைஅறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு பள்ளித்தாளாளர் நினைவுப்பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தார்.ரமணீதரன் சார் அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது மிகுந்த மகிழ்வாய் இருந்தது. அவர் தான் எடுத்த பலவிதமானபறவைகள், வனவாழ் உயிரினங்களின் புகைப்படங்கள்வாழ்க்கைமுறை இருப்பிடம் மற்றும் உணவுப் பழக்கம் பற்றிய பலசுவையான தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார். புலிகளும்,மான்களும் யானைகளும் பறவைகளும் கரடிகளும் செந்நாய்களும்இன்னும் வன உயிரினங்களும் எங்களோடு ஆனந்த வன நிகழ்ச்சியில்சர்வ சுதந்திரமாக உலா வந்தனர்.மாணவர்களை உற்சாகக் கடலில் அமிழ்ந்தனர். ஆசிரியர்கள்வானளவு மகிழ்ச்சியில் திளைத்தனர். அனைவரும் மிகுந்தஉற்சாகத்துடன் கைத்தட்டி ஆர்ப்பரித்து நிகழ்ச்சியின் சிறப்பு பெருமைசேர்த்தது. side-by-side ஏகப்பட்ட அதிசயங்கள் ஒவ்வொன்றையும்நிதானமாக விளக்கியது அருமையிலும் அருமை. யானைகள் பற்றிக்கூறும்போது யானைகள் கூட்டமாக வாழும் என்றும் உடல் அசைவின்மூலம் எதிரில் உள்ளவர்களை எச்சரிக்கும் என்பதனை உலக அளவில்பரிசு பெற்ற தனது புகைப்படங்களைக் கொண்டு விளக்கினார்.புலிகளின் பெயரை சொல்ல சொல்ல வியந்து போனோம் அங்கேநேரில் சென்று பார்த்தது போல் இருந்தது யானைகள் புலிகள் இவற்றின்தாக்குதல் முறைகள் சில்லிட வைத்தது.மாணவர்களுக்கு மான்களில் பல்வேறு இனங்களையும்அவற்றில் ஆண் பெண் இனங்காண்பது எப்படி என்பதையும் புலிகள்பற்றிய அரிதான செய்திகளை விளக்கமாகவும் சுவையாகவும் எடுத்துக்கூறினார். புலிகளின் வேகம் உடல் எடை அவர்களுக்கு பெயரிடும்முறை ஆண் மற்றும் பெண் புலிகளைக் கண்டறியும் முறை பற்றியும்மிக ஆர்வமுடன் எடுத்துரைத்தார்.நிறைவாக நாம் வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வனஉயிர்கள் பெருகி காட்டின் வளம் பெருகினால் நாடு செழிக்கும் என்றகருத்தையும் ஆணித் தரமாய் கூறி மாணவர்கள் உள்ளங்களில்அழுத்தமாய் பதிய வைத்தார்.சிறப்பு விருந்தினர்களின் மிகச்சிறந்த ஒளிப்படங்களுக்காகசர்வதேச விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது என்றதகவல் அறிந்ததில் மகிழ்ந்தோம். அவரின் துறை சார்ந்த செயற்பாடுகள்எங்களை அதிசயிக்க வைத்தது.சந்தோசங்களை அலை அலையென பரவச் செய்த நண்பருக்குநன்றி .மிகுந்த அன்பாய் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட கிருஷ்ணன்அவர்களுக்கும் நன்றி இருவருக்கும் ஆனந்தா வித்யாலயா சார்பாகமனம் நிறைந்த அன்பை மகிழ்வை பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News