தமிழ்நாடு அரசு குறு குழுமம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிட்கோவின், நெசவுக்குழுமம் (பெண்கள்) 16.02.2026, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு குறு குழுமம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிட்கோவின் மூலம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, கணபதிசுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் 377.16 லட்சங்களில் அரசாணை எண்.34. MSME (D1) துறை, நாள் 26.05.2022 மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் ரூபாய் 339.37 லட்சங்கள் மானியத்துடன் நெசவுக்குழுமம் (பெண்கள்) தொடங்கிட கடந்த 14.09.2022 அன்று தமிழ்நாடு சிட்கோவின் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.
இதன் நீட்சியாக குழுமத்தின் கட்டிடப் பணிகள் முடிவுற்று அவற்றின் இயந்திர தளவாடங்களை நிறுவி குழுமம் தனது உற்பத்தியினை தொடங்கிட வருகின்ற 16.02.2026, திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களால் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட உள்ளது என சிட்கோ கிளை மேலாளர் திரு.ஆ.பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்
0
Leave a Reply