25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


உணவு பாதுகாப்பு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உணவு பாதுகாப்பு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம்-2026 முன்னிட்டு நடைபெற்ற உணவு பாதுகாப்பு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (08.06.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day) ஆண்டுதோறும் ஜூன் 7 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற உணவுகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவை அனைவருக்கும் உறுதி செய்யவும் ஐக்கிய நாடுகள் சபை (UN) இந்த தினத்தை அறிவித்தது.

அதன்படி, உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவுப் பாதுகாப்பு கண்காட்சி இன்று நடைபெற்றது. இக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.பின்னர், கலப்படத்தைக் கண்டறியும் விரைவுச் சோதனை முறைகள் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்தக் கண்காட்சியில், கலப்பட உணவுகளைக் கண்டறிவது எப்படி, அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சத்துக்கள், பாரம்பரிய உணவு முறைகளின் நன்மைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிகள் குறித்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இருப்பது அவசியமாகும். ரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள் மற்றும் கலப்படங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இக்கண்காட்சி நுகர்வோருக்கும், வணிகர்களுக்கும் உணவுப் பாதுகாப்பு குறித்த நல்ல புரிதலை ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News