உலகின் மிகப்பெரிய வானியல் ஆய்வு மையத்தை உருவாக்கும் சீனா!
அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் உலக முன்னணியை நோக்கி வேகமாக முன்னேறி வரும் சீனா, தற்போது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வானியல் ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ள கிங்காய் மாகாணத்தில், சுமார் 550 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹4,600 கோடி) செலவில் இந்த பிரம்மாண்ட திட்டம் உருவாகி வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் 14.5 மீட்டர் விட்டம் கொண்ட சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மற்றும் நவீன விண்வெளி ஆராய்ச்சி உபகரணங்கள் நிறுவப்பட உள்ளன.
2030 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த மையம், தற்போது உலகின் முக்கிய வானியல் ஆய்வு தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹவாய் தீவுகளின் மௌனா கியா ஆய்வு மையத்தையும் மிஞ்சும் திறன் கொண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால், பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய்வதில் சீனாவுக்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் முக்கிய மைல்கல்லாக அமையும்.
0
Leave a Reply