கோவில் புளியோதரை வீட்டில் செய்யும் முறை.
தேவையான பொருட்கள் -
கடலைப்பருப்பு 1/4 கப்,
உளுத்தம் பருப்பு. 1/4 கப்,
கொத்தமல்லி விதைகள் - 2 தே.கரண்டி,எள்ளு - 2தே.கரண்டி,
மிளகு-1தே.கரண்டி,
வெந்தயம்-1 தே.கரண்டி,
கறிவேப்பிலை சிறிதளவு,
காய்ந்த மிளகாய்-10-15,
புளி - ஒரு எலுமிச்சங்காய் அளவு.
செய்முறை -
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை எண்ணெய் சேர்க்காமல் பொன்நிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கொத்தமல்லி விதை வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இதையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில் கறிவேப்பிலையை நன்றாக சூடாக்கி உலர வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைசலை சேர்த்து நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு இதில் சிறிதளவு உப்பு சேர்த்து, நன்றாக ஆறிய பின் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது கொரகொரப்பாள பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் கடுகு கடலைப்பருப்பு, கரு வேப்பிலை,பெருங்காயம் தாளித்து சேர்த்தால் சுவையான புளியோதரை பொடி தயார்.அதன் பின்னர் சாதம் வடித்து அதில் தேவையான உப்பு,நல்லெண்ணெய் கலந்து, தேவையான அளவு பொடியையும் போட்டு கலந்தால் கோவில் பாணியில் சுவையான புளியோதரை தயார்.
0
Leave a Reply