25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


கோவில் புளியோதரை வீட்டில் செய்யும் முறை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவில் புளியோதரை வீட்டில் செய்யும் முறை.

தேவையான பொருட்கள் - 

கடலைப்பருப்பு 1/4 கப்,

உளுத்தம் பருப்பு. 1/4 கப்,

கொத்தமல்லி விதைகள் - 2 தே.கரண்டி,எள்ளு - 2தே.கரண்டி,

மிளகு-1தே.கரண்டி,

வெந்தயம்-1 தே.கரண்டி,

கறிவேப்பிலை சிறிதளவு,

காய்ந்த மிளகாய்-10-15,

புளி - ஒரு எலுமிச்சங்காய் அளவு.

செய்முறை -

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை எண்ணெய் சேர்க்காமல் பொன்நிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கொத்தமல்லி விதை வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இதையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில் கறிவேப்பிலையை நன்றாக சூடாக்கி உலர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைசலை சேர்த்து நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு இதில் சிறிதளவு உப்பு சேர்த்து, நன்றாக ஆறிய பின் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது கொரகொரப்பாள பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் கடுகு கடலைப்பருப்பு, கரு வேப்பிலை,பெருங்காயம் தாளித்து சேர்த்தால் சுவையான புளியோதரை பொடி தயார்.அதன் பின்னர் சாதம் வடித்து அதில் தேவையான உப்பு,நல்லெண்ணெய் கலந்து, தேவையான அளவு பொடியையும் போட்டு கலந்தால் கோவில் பாணியில் சுவையான  புளியோதரை தயார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News