25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வெஜிடபிள் குருமா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெஜிடபிள் குருமா .

தேவையான பொருட்கள்:

காய்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி) - 1 கப்,

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),

இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,

பச்சை மிளகாய் - 2 (கீறியது),

தேங்காய் - ½ கப் (துருவியது),

முந்திரி - 5-6 (விரும்பினால்),

கசகசா - 1 தேக்கரண்டி,

சோம்பு - 1 தேக்கரண்டி,

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு,

மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி,

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப),

மல்லித் தூள் - 1 தேக்கரண்டி,

கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு,

மல்லித்தழை - அலங்கரிக்க.

செய்முறை:

தேங்காய் விழுது தயாரித்தல்: ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குருமா செய்தல்: அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.கட் செய்த காய்கறிகளை சேர்த்து, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்து, கரம் மசாலா தூள் சேர்த்து, 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.மல்லித்தழை தூவி இறக்கவும்.

சுவையான வெஜிடபிள் குருமா சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி போன்றவற்றுடன் பரிமாறலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News