25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பாலக் கீரை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பாலக் கீரை.

உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், தினமும் உணவில் ஒரு குறிப்பிட்ட கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த உற்பத்தியை அதிகப்படுத்தலாம். அந்த அற்புதக் கீரை பாலக் கீரை ஆகும்.பாலக் கீரை உடலுக்கு நிறைய ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது கண் பார்வை திறனை அதிகரிப்பதோடு இரத்த இழப்பைக் குறைக்கிறது. மேலும், இது எலும்புகளை வலுப்படுத்தவும் உதவும். 

பாலக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் மிகவும் வலுவாக இருக்கும்.உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த பாலக் மிகவும் நன்மை பயக்கும். அதாவது, உங்கள் உடலில் நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் சமமாக உள்ளது. பால் சாப்பிடக் கூடாது. இவ்வாறு செய்வதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.உடலில் இரத்தம் சோகை உள்ளவர்கள் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரத்த இழப்பைக் குறைக்க உதவுகிறது.

குறைவான ரத்த அளவு உள்ளவர்கள், மேற்கூறிய முறையில் நீராவியில் வேகவைத்த இந்த பாலக் கீரையை ஒரு நேர உணவாக தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ரத்த அணுக்களின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்.

பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும். பாலக் கீரையானது புற்று நோய் செல்கள் உருவாகாமல்  தடுத்து நிறுத்த கூடியது.
 பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும். பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை உணவோடு எடுத்து கொண்டால் பால் அதிகம் சுரக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News