25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


குளிர்ப் பிரதேசக் காய்கறி  காலிஃப்ளவர் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குளிர்ப் பிரதேசக் காய்கறி  காலிஃப்ளவர் .

காலிஃப்ளவர் குளிர்ப் பிரதேசக் காய்கறி. குளிர்காலத்தில் இது அதிகமாகக்  கிடைக்கிறது. இத்தாலியில் அதிகமாக விளைவிக்கப்பட்டது.காலிஃப்ளவர் முதன்முதலில்ஆசியாவில்தான்பயிரிடப்பட்டது.எண்ணற்றமருத்துவக்குணங்கள்அடங்கியதுகாலிஃப்ளவர்.இந்தப்பூக்களில்பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் ஏ, சி, மாவுச்சத்து, புரதம், சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை இருக்கின்றன. கண் பார்வைக்குத் தேவையான கேரோட்டின் சத்து, நார்ச்சத்து ஆகியவை இந்தப் பூவில் அதிகம்.

இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது.இது உஷ்ணத்தைத் தணிக்கும். இதைச் சாப்பிட்டால் சளி குறையும். உடல் வறட்சியைப் போக்கும். இருமல் குறையும், வாய் துர்நாற்றம் நீங்கும். உடல் இளைப்பு நீங்கும். காலிஃப்ளவர் மேனியை மினுமினுப்பாக்கும். 

தண்ணீரில் இந்தப் பூவை வேகவைப்பதைவிட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். அப்படி செய்தால் வைட்டமின் சி சத்து அதிகரிக்கும். மேலும், காலிஃப்ளவர் கொழுப்புச் சத்து இல்லாத காய்கறி, குறைந்த கலோரி கொடுக்கும். அதனால், இதய நோய்க்கு இதமான பூ இது. புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News