25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பேரிக்காயின் நற்பயன்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பேரிக்காயின் நற்பயன்கள்.

கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவு ம் உள்ள பேரிக்காய், ஆப்பிளை விடவும் சத்து நிறைந்தது. இதனை பெண்களுக்கான வரப்பிரசாதம்.

பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறுக ளை ஒழுங்குப்படுத்தக்கூடியது. 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து அளவில், 24 சதவீதம் பூர்த்தி செய்கிறது.

கர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெறும். குழந்தை பெற்ற பெண்கள் காலை மாலை 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு  அதிகரிக்கும்.

ஹீமோகுளோபின் பிரச்சனை மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், இந்த பேரிக்காயை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் கெட்ட கொழுப்பை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது. சிறுநீரகத்தில் படிந்துள்ளகற்களை வெளியேற்ற உதவுகிறது.

உணவு சாப்பிடுவதற்கு முன் இந்த பழத்தை சாப்பிட்டால், உணவிலுள்ள கொழுப்பு உடலில் தங்குவது தடு க்கப்படுகிறது. 100  கிராம் பேரிக்காயில் 56கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைப்பதில் உதவுகிறது.

பேரிக்காய் கிட்டத்தட்ட 84 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்தது. இதனால், உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலுக்கு ஆற்றலை தந்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இந்த பேரிக்காயில் நிறைந்துள்ளது. இரவு சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

பேரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் நீங்கும். வாய்ப்புண மற்றும் வயிற்றுப்புண்களை நீக்குகிறது.

உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இந்த பேரிக்காய்க்கு உண்டு. பேரிக்காய் சாப்பிட்டால், எலும்புகள், பற்கள் உறுதியாகும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் டைப் 2 நீரழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News