25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 20, 2026

பூமிக்கு அடியில் கடல்!

பூமியின் மேற்பரப்பில் உள்ள பெருங்கடல்களை விட3 மடங்கு அதிக நீர் பூமிக்கடியில்700 கி.மீ. ஆழத்தில் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்'ரிங்வுடைட்' எனப்படும் ஒருவகை நீல நிறத் தாதுப் பாறைக்குள் ஒருSponge போல இந்த நீர் மூலக்கூறுகள் தேங்கியிருப்பதாகவும், இந்தப் பாறைகள் ஏதோ 'வியர்ப்பது' போல நீரைத் தங்களுக்குள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Apr 20, 2026

வெயில் காலத்துல அரிப்பு தாங்க முடியலையா?

தினசரி துளசி, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் நீண்ட நேரம் போட்டு வைத்திருந்து குளித்தால் கோடையில் வியர்வையால் நச நசத்து அரிப்பது அடங்கும். இதனால் சருமம் பாதுகாக்கப்படும்

Apr 20, 2026

“இந்தியாவில் முதல் மனிதன் தோன்றிய இடம் தமிழ்நாடு"

60,000 வருட பழமையானமனிதன்தமிழகத்தில்மதுரைக்குஅருகிலுள்ளகிராமத்தைச் சேர்ந்ததிரு.விருமாண்டி, அவரது 9 தலைமுறை சேர்ந்த 13 உறுப்பினர்களுடன், இந்தியாவில் முதன்முதலில் குடியேறியவர்களின் நேரடி சந்ததியினரில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். இவர்கள் சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கடற்கரையிலிருந்து குடிபெயர்ந்த 'M130' மரபணுவைக் கொண்டவர்கள்.

Apr 18, 2026

ஷாம்பூவை, தலைமுடியில் எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?

ஷாம்பூவை, எடுத்த உடனே தலையில் தேய்த்துக் கொள்ள கூடாது. முதலில், தலைமுடியை தண்ணீர் ஊற்றி நன்கு நனைத்துக் கொள்ள வேண்டும். பின், ஷாம்பூவை ஒரு சிறிய பாத்திரம் (அ) கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். .அதன் பின், ஷாம்பூ பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்குக் கலக்கிக் கொள்ள வேண்டும். * கலக்கி வைத்த ஷாம்பூவை தலையில் கொஞ்சம் கொஞ்சமாக தேய்த்துக் கொள்ள வேண்டும். * பின்னர், தலையை விரல் முனைகளால் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இறுதியாக, தலையை நன்றாக கழுவிக் (அலசி) கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், தலையில் உள்ள அழுக்கு நீங்கு விடும். மேலும், தலைமுடிகளை மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

Apr 18, 2026

சிலிண்டர் முன்பதிவு செய்வோருக்கு ஜாக்பாட்.

பாரத், ஹெச்பி, இன்டேன் ஆகிய கேஸ் நிறுவனங்களின் சிலிண்டரை பேடிஎம் செயலி மூலம் முன்பதிவு செய்தால் ரூ.200 கேஷ்பேக்ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பேடிஎம் செயலியில் 'கேஸ் சிலிண்டர் முன்பதிவு' விருப்பத்தை தேர்வு செய்து தகவல்களை நிரப்பி ப்ரோமோ குறியீட்டை பெற்று பயன்படுத்த வேண்டும்.

Apr 18, 2026

உயிர் வாழ உதவிய வாழை இலை .

குறை பிரசவத்தில் பிறந்த சிசுவை இக்காலத்தில் இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து பிழைக்க வைக்கிறார்கள். அக்காலத்தில் குறைப்பிரசவ சிசுவை வாழை இலையில் வைத்து மற்றோர் வாழை இலையால் போர்த்தி பாதுகாத்தார்கள்.அப்படி உயிர் வாழ இலை உதவியதால் ,அவ்விலையை வாழ இலை வாழை இலை என வழங்கலாயிற்று!

Apr 18, 2026

பேசுவது எப்படி?.

தாயிடம் அன்பாகப் பேசுங்கள், தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள், துணைவியிடம் உண்மையைப் பேசுங்கள், சகோதரியிடம் பாசமாகப் பேசுங்கள்,சகோதரனிடம் அளவாகப் பேசுங்கள், குழந்தையிடம் செல்லமாகப் பேசுங்கள், உறவினரிடம் பரிவாக பேசுங்கள், நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள், வியாபாரியிடம் கராராகப் பேசுங்கள், வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள், கடவுளிடம் மவுனமாக பேசுங்கள், அறிவாளியிடம் பணிவாகப் பேசுங்கள், எதிரியிடம் தைரியமாகப் பேசுங்கள்.பிறர் மனம் புண்படாதவாறு பேசுங்கள்.

Apr 18, 2026

ஏப்ரல் 1 முதல் புதிய ATM விதிகள்!

மாற்றம் செய்த இரண்டு வங்கிகள்!*முக்கிய மாற்றங்கள்:UPI மூலம் ATM-ல் பணம் எடுத்தாலும், அது இப்போது "Free Limit” க் குள் சேரும்.இலவச வரம்பு முடிந்தால், ஒவ் வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 +வரி .தினசரி பணம் எடுக்கும் வரம்பு சில வங்கிகளில் குறைப்பு.Card இல்லாமலே QR Scan செய்து பணம் எடுக்கும் புதிய வசதி.முக்கிய வங்கிகள் எடுத்த முடிவுகள்:HDFC Bank - UPI பரிவர்த்தனையும் Free Limit-ல் சேர்க்கப்பட்டது.Punjab National Bank – தினசரி பணம் எடுக்கும்  வரம்பு மாற்றம்.Jio payments Bank - Cardless  QR withdrawal வசதி.

Apr 17, 2026

உங்களை ஏழையாக மாற்ற கூடிய பத்து பழக்கங்கள்.

1. பணம் வந்ததும் செலவழிக்காதீங்க.2. கடன் வாங்கி வாழ நினைத்தால் உங்கள் நிலை மோசமாகிவிடும்.3. பிறர் பார்வைக்காக செல்வழிக்காதீங்க.4. வருமானத்தை விட ,ஆசை அதிகமாக இருந்தால் பணம் பறந்து போகும்.5.உண்மையான தேவைக்கு மட்டும் செலவிடுங்க.6.பாசாங்கு செலவுகள் பாதுகாப்பை சிதைக்கும்.7. பணம் வரும் வழியை கவனியுங்கள். போகும் வழியே உங்கள் நிலையை தீர்மானிக்கும்.8. ஆடம்பர வாழ்க்கை ஆழ்ந்த வறுமைக்கு வழிவகுக்கும்.9.நாளைக்காக சேமிக்க தவறாதீங்க.10.தேவையற்ற செலவுகளை தவிர்த்திடுங்கள்.

Apr 17, 2026

கோடை காலத்தில் உங்க வீட்டை ஏசி போல மாத்த ஒரு எளிய வழி

வீட்டு ஜன்னல்களுக்கு ,கரும் பச்சை அல்லது கருநீல நிற திரைச் சீலைகளை பயன்படுத்தினால், வெயிலின் உஷ்ணம் உள்ளே வருவது குறையும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 82 83

AD's



More News