25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


அவல் ஊத்தப்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அவல் ஊத்தப்பம்.

தேவையான பொருட்கள்-

1/2 கப் அவல்,1/4 கப் ரவை,1/4 கப் புளிப்பில்லாத கெட்டி தயிர்,

2 டேபிள்ஸ்பூன் துருவிய கேரட்,2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,

சிறிதளவுபொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை,

தேவையானஅளவு உப்பு,தேவையான அளவு தண்ணீர்

செய்முறை -

முதலில் அவலை கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.பின் ஊற வைத்த அவலை நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின் இதனுடன் ரவை, தயிர் தேவையான அளவு , சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதிகமாக தண்ணீர் சேர்க்க கூடாது. பின்னர் ஊத்தப்பம் சரியாக வராது. அடை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

கேரட் ,வெங்காயம் , கொத்தமல்லி தழை மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். அடுப்பை பற்றி வைத்து தோசை கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பின் மேலாக கேரட் வெங்காய கலவையை பரவலாக தூவி எண்ணெய் சேர்த்து இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்.  அவல் ஊத்தப்பம் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News