25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஒற்றையரில் காலிறுதிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீரர் லக்சயா சென்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஒற்றையரில் காலிறுதிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீரர் லக்சயா சென்

 பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக்கில் பாட்மின்டன்பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவுண்டு 16, போட்டியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோ மோதினர். முல் செட்டை 19-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 14-21 எனக் கோட்டை விட்டார். முடிவில் சிந்து 19-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய்யிக் ஜோடியை சந்தித்தது. இதில் சாத்விக்- சிராக் ஜோடி 21-13, 14-21, 16-21, என தோல்வியடைந்து வெளியேறியது. சூடபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு ரவண்டு 16, போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, 0-4, என சீனாவின் யிங்ஷாவிடம் தோல்வியடைந்தார்.இதில் லக்சயா சென் 21-12, 21-6, என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையரில் காலிறுதிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீரரானார்.

ஆண்களுக்கான குத்துச்சண்டை 71 கிலோ பிரிவு ரவண்டு 16, போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ்.3-2 என ஈகுவடாரின் ஜோஸ் டெனோரியோவை வீழ்த்தினார். 

பெண்களுக்கான நீச்சல் 1500 மீட்டர், பிரிஸ்டைல், பிரிவு பைனலில் இலக்கை 15 நிமிடம், 30.02 வினாடியில் கடந்த அமெரிக்காவின் கேட்டி லெடிக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News