25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்

சிறுகோள் ஆய்வில் ஈடுபட்ட சைக் விண்கலம்,14 கோடி மைல் தொலைவில் இருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. நியூயார்க், சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையே சிறுகோள்கள் சுற்றி வருகின்றன. இவற்றை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது. இந்த விண்வெளி திட்டத்தின்படி, சைக்16 எனபெயரிடப்பட்ட சிறுகோளை ஆய்வு செய்ய2023ம் ஆண்டு அக்டோபரில் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு நாசா அனுப்பியது.

 பொதுவாக சிறுகோள்கள் பெரிய கற்களால் ஆனவை. ஆனால், இந்த சிறுகோளானது உலோகங்களால் உருவாகி இருக்கும் என நம்பப்படுகிறது. இது சூரிய குடும்பத்தில் அரிய ஒன்றாகும். செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களுக்கு இடையே இந்த சிறுகோள் உள்ளது என கூறப்படுகிறது. சிறுகோளின் பெயரை ஒட்டி இந்த புதிய விண்கலத்திற்கு சைக் என நாசா பெயர் சூட்டியது. இந்த விண்கலம் லேசர் தொலைதொடர்பு பற்றிய பரிசோதனையிலும் ஈடுபடும் பணியை மேற்கொண்டு உள்ளது. இதற்காக டி.எஸ்.ஓ.சி. எனப்படும், விண்வெளியின் ஆழ்ந்த ஒளி வழியான தொலைதொடர்புகளை கண்டறியும் சாதனம் சைக் விண்கலத்தில் உள்ளது. இதன் உதவியால் விண்வெளியில், தொலைதூரத்தில் இருந்து கொண்டு லேசர் வழியேயான தொலைதொடர்புகளை ஏற்படுத்துவது சாத்தியப்படும். விரைவில் இணைப்பை மேற்கொள்ளவும் வழிவகுக்கும். சைக் விண்கலம் ரேடியோ அலைவரிசை தொலைதொடர்பை முதலில் பயன்படுத்தி வந்தது.

 இந்த நிலையில், டி.எஸ்.ஓ.சி. தொழில்நுட்பம் அதன் திறனை நிரூபித்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி,14 கோடி மைல் தொலைவிலஇருந்து அந்த விண்கலம் பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த தொலைவானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவை போன்று1.5 மடங்குகொண்டது.இந்த டி.எஸ்.ஓ.சி. சாதனம் ஆனது, சைக் விண்கலத்தின் ரேடியோ டிரான்ஸ்மிட்டருடனும் தொடர்பு கொண்டு அதில் வெற்றியடைந்து உள்ளது. இதனால், விண்வெளியில் இருந்துதகவல் மற்றும் தரவுகளை நேரடியாக பூமிக்கு அனுப்ப முடிந்தது. எனினும், அந்த விண்கலம் அதிக தொலைவுக்கு சென்று விட்டது. அதனால், அதன் தகவல் பரிமாற்ற விகிதம் குறைவாக உள்ளது. ஆனால், இந்த திட்டத்தின் இலக்கை விட25 மடங்கு கூடுதலான விகிதத்தில் தரவுகளைபரிமாறி விண்கலம் சாதனை படைத்துள்ளது. அதனுடன், சைக்16 சிறுகோளை நோக்கிய தன்னுடைய பயணத்தில் தொடர்ந்து, நிலையாக மற்றும் இயல்பாக சைக் ஈடுபட்டு வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News