25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டுப் பருவமான வெறும் 16 வயதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி, தற்போது ரூ.100 கோடியாக மாற்றியுள்ளார் பிரஞ்சலி அவஸ்தி என்ற சிறுமி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டுப் பருவமான வெறும் 16 வயதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி, தற்போது ரூ.100 கோடியாக மாற்றியுள்ளார் பிரஞ்சலி அவஸ்தி என்ற சிறுமி.

அமெரிக்காவின் புளோரிடாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரஞ்சலி அவஸ்தி. இவரது தந்தைக்கு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வியை மேம்படுத்தும் பணி என்பதால், அதில் பிரஞ்சலி அவஸ்திக்கும் சிறு வயது முதலே அதிகளவு ஆர்வம் இருந்துள்ளது.இதனால்,தனது7வது வயதிலேயே கோடிங் எழுதுவதை கற்றுக் கொண்ட பிரஞ்சலி அவஸ்தி, தனது13வது வயதில் புளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்டர்ன்ஷிப் காலத்தில் விர்சுவல் முறையில் கற்கத் தொடங்கினார்.

இந்த நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் வந்ததால், மெஷின் லேர்னிங் என்ற புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கற்கத் தொடங்கினார். இதே நேரத்தில்OpenAI நிறுவனம்ChatGPT பீட்டா வெர்ஷனை வெளியிட்டதால், அதை பயன்படுத்தி ஆராய்ச்சித் தரவுகளை பிரித்தெடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்யத் தொடங்கினார் பிரஞ்சலி அவஸ்தி.பின்னர்,Delv.AI என்ற நிறுவனத்தை உருவாக்கி, டேட்டா தொடர்பான பல்வேறு பணிகளை செய்யத் தொடங்கினார். இதன் மூலம் On Deck மற்றும் Village Global ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பிரஞ்சலி அவஸ்தியின் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அளவிற்கு முதலீடு கிடைத்தது.

இதன்மூலம்16 வயதில் நிறுவனத்தின் மதிப்பை ரூ.100 கோடியாக மாற்றி, அமெரிக்க வாழ் இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அத்துறையில், தொழில்துறையில் சாதிக்க விரும்புவோருக்கும் புதிய ஊக்கத்தை கொடுத்துள்ளார் பிரஞ்சலி அவஸ்தி

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News