25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு 6 தமிழ் ஆசிரியர்கள் மாவட்டம் முழுவதும் செல்லும் தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு 6 தமிழ் ஆசிரியர்கள் மாவட்டம் முழுவதும் செல்லும் தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு,  என் வாக்கு விற்பனைக்கு அல்ல மற்றும் 100%வாக்குபதிவை வலியுறுத்தியும், 6 தமிழ் ஆசிரியர்கள் மாவட்டம் முழுவதும் செல்லும் தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S.,  அவர்கள்(14.04.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்களிடையே தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறும் வகையிலும், பணம் பரிசுப் பொருட்கள் பெற்று வாக்களிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக ஆறு தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 230 கிலோமீட்டர் மிதிவண்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த மிதிவண்டி தேர்தல் விழிப்புணர்வு பயணத்தின் முதல் நாளில் விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும்,இரண்டாம் நாளில் அருப்புக்கோட்டையில் இருந்து  சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய பகுதிகளுக்கும்,மூன்றாம் நாளில் சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர், இராஜபாளையம்  ஜவஹர் மைதானம்  வரை மாவட்டம் முழுவதும் 230 கிமீ சுற்றுப்பயணம் மேற்கொண்டு என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர் என மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News