25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில்  (28.03.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. ஜனநாயக நாட்டில் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஜனநாயக வழியில் தான் ஏற்படுத்த முடியும். நாம் போடும் ஒரு ஓட்டினால் என்ன ஆகப்போகிறது என்று கூறுவது சரியானதாக இருக்க முடியாது.
முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்ட போது எல்லோரும் வாக்களிக்க முடியாது. குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் வாக்குரிமை இருந்தது. இப்போது 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கலாம். நாட்டில் அனைவரும்  சமம். நாட்டில் 18 வயது நிரம்பிய ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், முதல் குடிமகன் முதல்  ஒரு சாதாரண குடிமகன் வரை ஒரு சமமான உரிமையை உறுதி செய்வது தான் வாக்குரிமை.  நமது நாட்டில் சராசரியாக 70 முதல் 75 விழுக்காடு தான் கடந்த சில தேர்தல்களில் வாக்குப்பதிவு நடைபெற்று இருக்கிறது. நான்கில் ஒரு நபர் வாக்கு அளிப்பதில்லை. நமக்கான ஒரே வாய்ப்பு ஜனநாயக பொறுப்பு என்பது வாக்கை செலுத்துவதுதான்.

தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் நாளன்று அனைவருக்கும் பொது விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஜனநாயக வழி என்பது 18 வயது நிரம்பிய அனைவருக்குமான வாக்குரிமை மூலம் உங்களுக்கு தேவையான தலைவர்களை தேர்வு செய்து தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த  ஜனநாயகம் தருகிறது. ஜனநாயகத்தின் உடைய மிக முக்கியமான வாய்ப்பு நமக்கு வாக்குரிமை தான். குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் முழுமையாக தங்களது வாக்கு உரிமையை நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகத்தில் நாம் பங்களிப்பதற்கான உரிமையும், பொறுப்பும் அளிப்பது தேர்தல்.
 

வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவார்கள். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை இணையதளம்; மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும்  இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க தூண்டுகோலாக இருந்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News