25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வயிற்று புண்களை விரட்ட அல்சர் குறைய மோர்,நீர்க்காய்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வயிற்று புண்களை விரட்ட அல்சர் குறைய மோர்,நீர்க்காய்கள்

உணவு சரியாக எடுத்து கொள்ளாதது, அதிக உணவு, அதிக காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும், அல்சர் வரலாம்.. அதேபோல, உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் போன்றோருக்கும் அல்சர் போன்ற வயிற்றுப் புண் பிரச்சனை வரலாம். ஒருவகையான வலிநிவாரணிகளை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும், சிகரெட் பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள், ஆல்கஹால் பயன்படுத்துபவர்கள் போன்றோருக்கு அல்சர் வரலாம். அல்லது, பாக்டீரியா தொற்று, மன உளைச்சல், அதீத கவலை அல்சர் வரலாம்.. அல்சர் பிரச்சனை ஆரம்பக்கட்டமாக இருந்தால் உணவு முறை மூலமாகவே தீர்வு காணலாம். அல்சர் ஏற்பட்டுவிட்டால் வயிற்றில் புண்கள் ஏற்படும். அதாவது, உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களையே வயிற்றுப்புண்கள் என்று சொல்கிறோம். காபி: முதலில், காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.. காபியில் காஃபின் என்ற பொருட்கள், வயிறு புண்களை அதிகப்படுத்திவிடும்.. வயிற்றில் அமிலத்தன்மையையும் அதிகரிக்க செய்துவிடும். இதனால் வயிறு வலி அதிகமாகும். இந்த காஃபின் நிறைந்த ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப்பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

.பால் நிறைய குடிக்கக்கூடாது. பாலில் நிறைய கொழுப்பு உள்ளதால், வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை இந்த பால் அதிகப்படுத்திவிடும்.. கூல் டிரிங்க்ஸ், சோடா போன்ற பானங்களை தவிர்க்கலாம். இதுவும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகப்படுத்திவிடும். சிவப்பு இறைச்சியிலும், நிறைய கொழுப்பு, புரோட்டீன் உள்ளதால், அவைகளையும் தவிர்த்துவிட வேண்டும்.
வயிறு எரிச்சல்: வயிற்றில் அல்சர் புண் இருப்பவர்கள், முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளை சாப்பிட வேண்டும். தேங்காய்ப்பாலுக்கு வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் தன்மை உண்டு.. தினமும் அரை கிளாஸ் தேங்காய் பால் குடிப்பதால் வயிறு எரிச்சல் குறையும், வயிறு புண்களும் மெல்ல ஆற துவங்கும். அல்லது வெறும் மணத்தக்காளி கீரைகளை நான்கைந்து கழுவி வெறுமனே மென்று சாப்பிடலாம்.தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், புண்களுக்கு சிறந்தது. அதேபோல, மோர் குடிக்கலாம்.. இதனால், வயிறு எரிச்சல் தணிவதுடன், உடல் முழுவதுமே உடல் சூட்டினை தணித்துவிடும். மாதுளை ஜூஸ்களுக்கும் புண்களை ஆற்றக்கூடிய சக்தி உண்டு.. அதனால், மாதுளை சாறு தினமும் அரை கிளாஸ் குடிக்கலாம்.. 

நீர்க்காய்கள்: முட்டைக்கோஸ், பூசணிக்காய், முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.. இளநீர் அடிக்கடி குடிப்பதன் மூலம் அல்சர் குறையும். ஆனால், இதெல்லாம் அல்சர் புண்களை ஆற்றுவதற்கு ஓரளவு மட்டுமே உதவும்.. மற்றபடி, அல்சர் புண்கள் தீவிரமாவதற்கு முன்பேயே, மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது கட்டாயமாகும்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News