25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கண்ணியம் தவறாத நடிகர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண்ணியம் தவறாத நடிகர்கள்

 சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சில நடிகர்கள் ரசிகர்களை வசியம் பண்ணும் அளவிற்கு ஹேண்ட்ஸம் லுக் உடன் சொக்க வைத்து இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் நடித்த காதல் ரொமான்டிக் படங்கள் என்றால் விரும்பி பார்க்கும் அளவிற்கு சில படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி அழகாக இருந்தாலும் அவர்கள் எந்த கிசுகிசுவிலும் மாட்டாமல் கண்ணியமாக இருந்திருக்கிறார்கள்.  

தமிழில் ஆவாரம்பூ என்ற படத்தின் மூலம் சக்கரை கதாபாத்திரத்தில் அறிமுகமானார்வினித். அதன் பிறகு ஜென்டில்மேன், ஜாதிமல்லி, மே மாதம், சக்தி ஆகிய படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி போன்ற படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். அப்படிப்பட்ட இவரை பார்க்கும் பொழுது ஆர்ப்பாட்டமே இல்லாத நடிகராக கொள்ளை அழகுடன் இளசுகளை கவர்ந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் நடித்த படங்களான அலைபாயுதே, என்னவளே, மின்னலே, டும் டும் டும், ரன் போன்ற அனைத்து படங்களும் காதல் மற்றும் ரொமாண்டிக் ஹீரோ, நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திஇளசுகளின் மனதை கொள்ளையடிக்க வைத்தவர் மாதவன். அதுவும் இவர் காதல் ப்ரபோஸ் பண்ணும் விதம்தான் இப்பொழுது வரை பல இளைஞர்களுக்கு உதவி செய்து வருகிறது. ஆனாலும் இவர் மீது இதுவரை எந்தவித கிசுகிசுவும் வெளிவந்தது இல்லை. 

சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகும், பேசினால் கண்ணிமைக்காமல் பார்க்கும் அளவிற்கு ஹேண்ட்ஸம்

ஹீரோவாக ஜொலித்திருக்கிறார்அருண் விஜய். அதுவும் இவர் முக்கால்வாசி நடித்த படங்கள் அனைத்துமே காதல் சம்பந்தப்பட்ட படங்கள் தான். அந்த வகையில் இவரை ஒரு காதல் ஹீரோ என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இவர் மீது இப்பொழுது வரை எந்தவித கிசுகிசுமே வந்ததில்லை. அந்த அளவிற்கு ஒரு கண்ணியமான ஹீரோவாக இருக்கிறார்.

மாப்பிள்ளை யார் மாதிரி வேண்டுமென்று கேட்டால் அரவிந்த்சாமி மாதிரி தான் வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு கொள்ள அழகுடன் வசீகரமான தோற்றத்துடன் இருந்தார். இவர் ஹீரோவாக நடித்த சமயத்தில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவார். பெண் ரசிகர்கள் அவ்வளவு இருந்தாலும் அதை பெருசாக அலட்டிக்காமல் கமுகமாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

ஷாம்: வசியம் பண்ணும் அளவிற்கு கண்ணாலேயே பேசி கவரக்கூடிய ஹீரோவாக ஜொலித்தார். “12B ” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி அதை தொடர்ந்து காதல் படங்களை நடித்து வந்தார். ஆனாலும் இவருக்கு பெருசாக பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். மறுபடியும் ரீ என்டரி கொடுக்கும் விதமாக வாரிசு படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கு படத்தில் நடித்து  வருகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News