மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட அளவில் அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்காகவும், அனைத்து துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்திடவும், மாவட்ட வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை நிறுவனத்திற்கு (DLCA) வெளிப்பணி மூலம், மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடம் நிரப்பப்பட வேண்டியுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த, ஓய்வு பெற்ற வங்கி அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுள்ள நபர்கள் வரும் 09.03.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை நகர்ப்புற வாழ்வாதார மையம், கடை எண்: 7, முதல் தளம், பூமாலை வணிக வளாகம், பழையபேருந்து நிலையம் அருகில், விருதுநகர்,
மின்னஞ்சல் முகவரி clcvnr2021@gmail.com என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலகமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply