25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அரசு பொதுத்தேர்வு -2024 நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு பொதுத்தேர்வு -2024 நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை ஆய்வு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் (26.03.2024) அரசு பொதுத்தேர்வு-2024 நடைபெற்று வரும் மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்; நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.2023-2024 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 26.03.2024 அன்று தொடங்கி 08.04.2024 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 358 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 114 தேர்வு மையங்களில் 10,908 மாணவர்களும், 11,097 மாணவியர்களும் என மொத்தம் 22,005 பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இதில் 277 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைத் தளத்தில்  தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதார், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியும், சொல்வதை  எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.மேற்கண்ட 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 27 வழித்தட அலுவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் 27 வழித்தடங்கள் மூலமாக அனைத்து இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் (SSLC) பொதுத் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படுகிறது.இத்தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களில் 119 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 119 துறை அலுவலர்கள், 1809 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்களாக 260 ஆசிரியர்களும், நியமனம் செய்யப்பட்டு தேர்வு பணி மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு 6 சிறப்பு பறக்கும் படை குழுவில் 12 உறுப்பினர்கள் மற்றும் தேர்வு மையங்களில் 157 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்காவல் படைத்தலைவர் மற்றும் பிறத்துறை அலுவலர்களைக் கொண்டு  மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.2023-2024 ஆம் கல்வியாண்டில் இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் (SSLC) தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுதேர்ச்சி பெற வேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News