பொரி அல்வா.
தேவையான பொருட்கள்:-
பொரி - 2 கப்
பொடித்த வெல்லம் - 1/2 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:-
முதலில் பொரியை நீரில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் பொடித்த வெல்லத்தை சிறிது நீர் ஊற்றி கரைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பொரியில் உள்ள நீரை வடிகட்டி அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் பொரியைப் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பிறகு அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி, அதைத் தொடர்ந்து அரைத்த பொரியையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.ஒரு கட்டத்தில் கலவையானது சற்று கெட்டியாகி, அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அப்போது வேண்டுமானால் சிறிது நெய் ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை நன்கு கிளறி இறக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டால், சுவையான பொரி அல்வா தயார்.
0
Leave a Reply