மணத்தக்காளி கீரை சட்னி.
தேவையான பொருட்கள் -
மணத்தக்காளி கீரை -ஒரு கைப்பிடி,சின்ன வெங்காயம்-10,
இஞ்சி- ஒரு சிறிய துண்டு,கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்,கொத்தமல்லி- ஒரு ஸ்பூன்,
சீரகம்- கால் ஸ்பூன்,வரமிளகாய்-4,கருவேப்பிலை-சிறிதளவு,புளி-சிறிதளவு,
தேங்காய் துருவல்-5 ஸ்பூன்,எண்ணெய் -இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை -
கீரையை நன்கு அலசி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து வறுக்கவும் .பின்பு வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுத்த உடன் இஞ்சி ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்பு மணத்தக்காளி கீரையை அதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி கொள்ளவும்.அதன் பின் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தேவையான அளவு சேர்த்து புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்.மணத்தக்காளி கீரை சட்னி ரெடி.
0
Leave a Reply