25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செஸ் ஒலிம்பியாட் 4வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் ஒலிம்பியாட் 4வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி பெற்றன.

ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு நான்காவது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, செர்பியாவை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்தியாவின் குகேஷ், செர்பியாவின் அலெக்சாண்டர் பிரெட்கே மோதினர். குகேஷ், 85வது நகர்த்தலில் வென்றார்.

இந்தியாவின் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்ஸி சரணா மோதிய மற்றொரு போட்டி 23வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்ற போட்டிகளில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 3.5- 0.5 என்ற கணக்கில் வரிசையாக 4வது வெற்றியை பதிவு செய்தது. நான்கு சுற்றுகளின் முடிவில் இந்திய அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 

பெண்களுக்கான நான்காவது சுற்றில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. முதல் போட்டியில் இந்தியாவின் ஹரிகா, பிரான்சின் டாலிட்-கார்னெட் டீமான்டே மோதினர் வெள்ளை நிற காய்களுடன் சாமர்த்தியமாக விளையாடிய ஹரிகா, 52வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் வைஷாலி, பிரான்சின் மில்லியட் சோபி மோதிய மற்றொரு போட்டி, 26வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.மற்ற போட்டிகளில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், தனியா சச்தேவ் வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News