25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உலகிலேயே மிகப்பெரிய அரண்மனையில் வசிக்கும் இந்தியப் பெண்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகிலேயே மிகப்பெரிய அரண்மனையில் வசிக்கும் இந்தியப் பெண்!

குஜராத் மாநிலம்,வதோராவின் மையப் பகுதியில்கம்பீரமாக அமைந்துள்ள லட்சுமி விலாஸ்அரண்மனைதான் உலகின் மிகப்பெரியதனிக் குடியிருப்பு என்ற பெருமையைகொண்டுள்ள ஒரு கட்டிடக்கலைஅதிசயம் ஆகும். இது1880களில் மகாராஜா சாயாஜிராவ்கெய்க்வாடால் கட்டப்பட்ட இல்லம் மட்டுமல்ல,பரோடாவை ஆண்ட கெயிக்வாட்வம்சத்தின் கம்பீரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் இது சான்றாகத்திகழ்கிறது.இந்தோ - சாரசெனிக் மறுமலர்ச்சி கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட லட்சுமி விலாஸ் அரண்மனைஇந்திய மற்றும் ஐரோப்பியகலைபாணிகளின்அதிசயகலவையைகொண்டுள்ளது.சிக்கலானசெதுக்கல்களாலும்பலவண்ணமர்மத்தாலும்அலங்கரிக்கப்பட்ட அதன் கம்பீரமான கட்டமைப்புஅனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய காட்சிஆகும்.

இந்த அரண்மனையில்170க்கும் மேற்பட்ட அறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு அறையும் அற்புதமான கலைப் பொக்கிஷங்களாலும், தளவாடங்களாலும் நிறைந்துள்ளன. கெயிக்வாட் வம்சத்தினர் இன்றும் இந்த அரண்மனையின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும், அவர்கள் தங்களின் முன்னோர்களின் பாரம்பரியத்தையும் கவனமாகப் பாதுகாத்து வருகின்றனர்.

ஐநூறு ஏக்கர் பரப்பளவில் கவனமாகப் பராமரிக்கப்படும் தோட்டங்கள், மலர்ச் சோலைகள் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானத்தையும் இந்த அரண்மனை கொண்டுள்ளது. ‘ஹவுசிங் டாட் காம்’ன் அறிக்கைபடி லட்சுமி விலாஸ் அரண்மனை மூன்று கோடியே நான்கு லட்சத்து 92 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளது.15,000 கோடிக்கு உலகின் விலையுயர்ந்த குடியிருப்பைக் கொண்டுள்ள முகேஷ் அம்பானியின்48 ஆயிரத்து780 அடி சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்ட குடியிருப்பை விட இது நான்கு மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது.கெய்க்வாட் வம்சத்தின் அரச தலைமுறையாக தற்போது ரதிகராஜே கெய்க்வாட் இந்த அரண்மனையில் வசித்து வருகிறார். ஜூலை 19,1978ல் பிறந்த இவர், வாசிப்பதிலும் எழுதுவதிலும் விருப்பமுள்ளவர். அத்துடன் இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இந்திய வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்று, செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News