25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இண்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா  இனிதான துவக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இண்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா இனிதான துவக்கம்

 இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ்சிட்டியின் சார்பாக இண்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயாதொடங்கும் நிகழ்ச்சி ரோட்டரி கிளப் தலைவர் M.C..பீமானந்த்அவர்கள் தலைமையில், பள்ளித் தாளாளர் ஸ்ரீமதி. ஆனந்தி அவர்கள்முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக Rtn.T.சரவணராஜ் அவர்கள் (தலைவர் ,ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை ) கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் திரு..காளிதாஸ் அவர்கள்அனைவரையும் வரவேற்க, Rtn. வெங்கடபெருமாள் அவர்கள் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்ய, பள்ளித் தாளாளரும், ரோட்டரி கிளப்தலைவரும் விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தியும், நினைவுப்பரிசு வழங்கியும் கௌரவம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் இண்ட்ராக்ட்கிளப் தலைவராக மாணவர் K. சந்தீப் மற்றும் செயலாளராக மாணவிR.A.தாமரைச்செல்வி பதவி ஏற்றுக் கொண்டனர்.சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் தம்எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொள்ள தங்கள் தனித் திறமைகளைவளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை பல்வேறு தலைவர்களைமேற்கோள் காட்டியும், அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களையும்கூறி விளக்கினார். "வெற்றியாளர்கள் மாறுபட்ட செயல்களை செய்யமாட்டார்கள். அவர்கள் செயல்களை சற்று வித்தியாசமாகசெய்வார்கள். மாணவர்கள் படிப்புடன் சேர்த்து தங்களுக்கான தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வருங்கால சமுதாயத்தைப்பாதுகாக்க உடலுடன் மனதினையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்என்றும் கூறினார்.மேலும் மகாத்மா காந்தி, நேரு, காமராஜர் மற்ற பிற தேசதலைவர்கள் எவ்வாறு தன்னலம் கருதாமல் பொது நலத்திற்காகதங்களை தியாகம் செய்தனர் என்பதையும் மிகச் சிறப்பாகவிளக்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர், ரோட்டரி கிளப் தலைவர்மற்றும் செயலாளர் வாழ்த்துரை வழங்க மாணவர் செயலாளர்தாமரைச்செல்வி நன்றியுரை கூற தேசிய கீதத்துடன் விழா இனிதேநிறைவுற்றது. விழாவில் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News