25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கிராமங்களில் குறைந்த முதலீட்டில் இலாபம் பெறக் கூடிய தொழில்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிராமங்களில் குறைந்த முதலீட்டில் இலாபம் பெறக் கூடிய தொழில்கள்.

 மாதச் சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் பலருக்கும் சொந்தமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என ஆசை இருக்கும். தொழில் தொடங்க முதலீடு இல்லாமல் சிலரும், நஷ்டம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் சிலரும், தொழிலை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற சிந்தனையில் சிலரும் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையை மட்டுமே மனதில் வைத்து முன்னேற பயப்படுகின்றனர். அந்த பயத்தை உடைத்து தன்னம்பிக்கையோடு அடுத்த அடியை எடுத்து வைத்தால் போதும். வெற்றிக்கனி நிச்சயம் ஒருநாள் வந்து சேரும். நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் தொழில் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. அவ்வகையில், கிராமங்களில் குறைந்த முதலீட்டில் இலாபம் பெறக் கூடிய தொழில்கள் .

பேரீச்சம்பழத்தின் தேவை சந்தைகளில் மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில் பேரீச்சம்பழத்தில் இருந்து பல வகையான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றனகிராமங்களில் பேரீச்சம்பழம் சாகுபடி செய்வதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். பேரீச்சம்பழ சாகுபடியில் சாதிக்க நிலத்தைப் பற்றிய புரிதல் அவசியம். பேரீச்சம்பழங்களை சாகுபடி செய்வது மட்டுமின்றி சந்தையில் வியாபாரம் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கற்றாழை சாகுபடியைத் தொடங்க40,000 முதல்50,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகும். கற்றாழை சாகுபடி செய்ய வயலில் ஒரு முறை மட்டும் நடவு செய்தால் போதும். நடவு செய்த3 ஆண்டுகளுக்கு இதிலிருந்து அறுவடை செய்து இலாபம் பெறலாம். கற்றாழை சாற்றை பலரும் விரும்பி குடிப்பதால், இதற்கும் சந்தைகளில் நல்ல வரவேற்பு இருக்கும்.

தற்காலத்தில் ஆடு வளர்ப்பு என்பது மிகவும் பரவலான தொழிலாகவும், எளிதாகவும் இருக்கிறது. இந்தத் தொழில் கிராம மக்களுக்கு மிகவும் ஏற்ற தொழில். மேலும், இத்தொழிலுக்கு அரசு மானியமும் கிடைக்கிறது. கிராமங்களில் ஆடுகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தொழிலில் ஆடுகள் விற்பனையைப் பொறுத்து மாதம் 1 முதல் 2 இலட்சம் ரூபாய் வரை இலாபம் கிடைக்கும்.

மிக எளிதாக கிராமத்தில் பால் வியாபாரத்தை வெற்றிகரமாகச் செய்யலாம். இந்தத் தொழில் மற்ற தொழில்களை விடவும் நல்ல லாபத்தைக் தரும்.5 பசுக்கள் அல்லது எருமைகளை வைத்தே இந்தத் தொழிலைத் தொடங்கி விடலாம். பால் வியாபாரத்தை பெரிய அளவில் தொடங்கினால், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உதவிகளையும் பெறலாம். பால் பண்ணையின் மூலம் மாதத்திற்கு சுமார் 1 முதல் 2 இலட்சம் ரூபாய் வரை இலாபத்தை ஈட்டலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News