இசைக் குயில் வாணி ஜெயராமின் மறைவு
பழம்பெரும் பின்னணி பாடகியான வாணி ஜெயராம்தனது78 , ஆம்வயதில் காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வாணி ஜெயராம் உயிரிழந்ததாக பிற்பகல்1.35 மணியளவில் அறிவிக்கப்பட்டது. வாணி ஜெயராமின் மறைவை அடுத்து திரையுலகத்தினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, பெங்காளி என பல இந்திய மொழிகளில் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாக கொடிக்கட்டி பறந்தவர் வாணி ஜெயராம்.கர்நாடக இசையை கடலூர். ஸ்ரீனிவாச ஐயங்கார், டிஆர் பாலசுப்ர மணியம், ஆர்.எஸ்.மணி ஆகியோரிடம் கற்று தேர்ந்தார். 8 வயதில் அகில இந்திய வானொலியில் முதல் இசை நிகழ்ச்சியை வழங்கினார் வாணி ஜெயராம்.
சென்னை ராணி மேரி கல்லுாரியில் படித்து, பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். 1967ல் ஐதராபாத் கிளைக்கு மாறினார்.1969ல் ஜெயராமை திருமணம் செய்த பின் ,மனைவியின் இசை புலமையை அறிந்த ஜெயராம், அவரை உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் ஹிந்துஸ்தானி இசை பயில வைத்தார். பின் வங்கி பணியில் இருந்து விலகிய வாணி ஜெயராம், தும்னி, காஜல், பஜன் இசை நுணுக்கங்களை முழுமையாக கற்றார். 1969ல் முதல் இசை நிகழ்ச்சியை மேடையில் நிகழ்த்தினார்.1971ல் ‘குட்டி படத்தில் 'போலே ரே பப்பி ஹரா' பாடலை பாடினார்.
பத்ம பூஷண் 2023, மூன்று தேசிய விருது (தமிழில் அபூர்வராகங்கள் படத்தில் ஏழு ஸ்வரங்களுக்குள்... 1975, தெலுங்கில் சங்கராபரணம் படத்தில் மானஸ ஸஞ்சரரே...1980, ஸ்வாதிகிரணம் படத்தில் ஆலோகயேஸ்ரீ பாலகிருஷ்ணம்.1991) நான்கு மாநில அரசு விருது(தமிழகம். ஆந்திரா, குஜராத், ஒடிசா),கலைமாமணி விருது,மூன்று பிலிம்பேர் விருது,தமிழக அரசின் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுகளைப் பெற்றவர்.
0
Leave a Reply