25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இசைக் குயில் வாணி ஜெயராமின்  மறைவு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இசைக் குயில் வாணி ஜெயராமின்  மறைவு

பழம்பெரும் பின்னணி பாடகியான வாணி ஜெயராம்தனது78 , ஆம்வயதில் காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வாணி ஜெயராம் உயிரிழந்ததாக பிற்பகல்1.35 மணியளவில் அறிவிக்கப்பட்டது. வாணி ஜெயராமின் மறைவை அடுத்து திரையுலகத்தினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, பெங்காளி என பல இந்திய மொழிகளில் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாக கொடிக்கட்டி பறந்தவர் வாணி ஜெயராம்.கர்நாடக இசையை கடலூர். ஸ்ரீனிவாச ஐயங்கார், டிஆர் பாலசுப்ர மணியம், ஆர்.எஸ்.மணி ஆகியோரிடம் கற்று தேர்ந்தார். 8 வயதில் அகில இந்திய வானொலியில் முதல் இசை நிகழ்ச்சியை வழங்கினார் வாணி ஜெயராம்.

சென்னை ராணி மேரி கல்லுாரியில் படித்து, பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். 1967ல் ஐதராபாத் கிளைக்கு மாறினார்.1969ல் ஜெயராமை திருமணம் செய்த பின் ,மனைவியின் இசை புலமையை அறிந்த ஜெயராம், அவரை உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் ஹிந்துஸ்தானி இசை பயில வைத்தார். பின் வங்கி பணியில் இருந்து விலகிய வாணி ஜெயராம், தும்னி, காஜல், பஜன் இசை நுணுக்கங்களை முழுமையாக கற்றார். 1969ல் முதல் இசை நிகழ்ச்சியை மேடையில் நிகழ்த்தினார்.1971ல் ‘குட்டி படத்தில் 'போலே ரே பப்பி ஹரா' பாடலை பாடினார். 

பத்ம பூஷண் 2023, மூன்று தேசிய விருது (தமிழில் அபூர்வராகங்கள் படத்தில் ஏழு ஸ்வரங்களுக்குள்... 1975, தெலுங்கில் சங்கராபரணம் படத்தில் மானஸ ஸஞ்சரரே...1980, ஸ்வாதிகிரணம் படத்தில் ஆலோகயேஸ்ரீ பாலகிருஷ்ணம்.1991) நான்கு மாநில அரசு விருது(தமிழகம். ஆந்திரா, குஜராத், ஒடிசா),கலைமாமணி விருது,மூன்று பிலிம்பேர் விருது,தமிழக அரசின் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுகளைப்  பெற்றவர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News