பாரிஸ் ஒலிம்பிக் நாளை துவக்கவிழா
பாரிஸ் ஒலிம்பிக், நாளை முறைப்படி கோலாகலமாகத் துவங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 11:00 மணிக்கு (ஜூலை 26) துவக்க விழா நடக்கும்.6 கி.மீ., நீளமுள்ள செய்ன் நதியில் ஒலிம்பிக் நட்சத்திரங்கள் படகில் அழைத்து வரப்படுவர். மைதானத்தை அடைந்த பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும்.
இன்று துவங்க இருக்கும் ஒலிம்பிக் வில்வித்தை போட்டி பெண்களுக்கான தகுதிச்சுற்று போட்டியில் தீபிகா குமாரி, அன்கிதா, பஜன் கவுர் பங்கேற்கின்றனர். ஆண்கள் பிரிவில் தருண்தீப் ராய், திராஜ், பிர வின் ஜாதவ் களமிறங்குகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரையில் ஒலிம்பிக் வில்வித்தையில் இது வரை யாரும் காலிறுதியை தாண்டியது இல்லை.
இம்முறை இந்தியா சாதிக்கலாம். முதன் முதலில் பங்கேற்றாலும், இதுதான் கடைசி என்ற நினைப்புடன் வெற்றிக்கு போராட வேண்டும் என தருண் தீப்ராய் 40, கூறினார் ஒலிம்பிக்கில் பங்கேற்பது தான் அனைவரின் கனவாக இருக்கும். இதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். இது எனது நான்காவது ஒலிம்பிக் . இப்போது இல்லை என்றால், இனி எப்போதும் கிடையாது என்ற சூழ்நிலையில் உள்ளேன். எப்படியும் பதக்கம் வெல்ல வேண்டும். என தருண் தீப்ராய் கூறினார்.
0
Leave a Reply