25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பாரிஸ் ஒலிம்பிக் நாளை துவக்கவிழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரிஸ் ஒலிம்பிக் நாளை துவக்கவிழா

 பாரிஸ் ஒலிம்பிக், நாளை முறைப்படி கோலாகலமாகத் துவங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 11:00 மணிக்கு (ஜூலை 26) துவக்க விழா நடக்கும்.6 கி.மீ., நீளமுள்ள செய்ன் நதியில் ஒலிம்பிக் நட்சத்திரங்கள் படகில் அழைத்து வரப்படுவர். மைதானத்தை அடைந்த பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும்.  

இன்று துவங்க  இருக்கும் ஒலிம்பிக் வில்வித்தை போட்டி பெண்களுக்கான தகுதிச்சுற்று போட்டியில் தீபிகா குமாரி, அன்கிதா, பஜன் கவுர் பங்கேற்கின்றனர். ஆண்கள் பிரிவில் தருண்தீப் ராய், திராஜ், பிர வின் ஜாதவ் களமிறங்குகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரையில் ஒலிம்பிக் வில்வித்தையில் இது வரை யாரும் காலிறுதியை தாண்டியது இல்லை.

இம்முறை இந்தியா சாதிக்கலாம்.  முதன் முதலில் பங்கேற்றாலும், இதுதான் கடைசி என்ற நினைப்புடன் வெற்றிக்கு போராட வேண்டும் என தருண் தீப்ராய் 40, கூறினார் ஒலிம்பிக்கில் பங்கேற்பது தான் அனைவரின் கனவாக இருக்கும். இதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். இது எனது நான்காவது ஒலிம்பிக் . இப்போது இல்லை என்றால், இனி எப்போதும் கிடையாது என்ற சூழ்நிலையில் உள்ளேன். எப்படியும் பதக்கம் வெல்ல வேண்டும்.  என தருண் தீப்ராய் கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News