25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களை இணைய வழி கணினி மூலம் சீரற்ற  முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களை இணைய வழி கணினி மூலம் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள்

விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  (02.04.2024) மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டமாக இணைய வழி கணினி மூலம் சீரற்ற முறையில் (Randomization) சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணிகள், தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா, I A S., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.மக்களவைத் தேர்தல்-2024 ஏப்ரல் -19 ந்தேதி நடைபெறுவதையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 1895 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடக்கூடிய  வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை-1, நிலை -2, நிலை -3 மற்றும் 1200 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிக்கு வாக்குச்சாவடி அலுவலர் நிலை-4  என மொத்தம் 9,243 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 262 வாக்குச்சாவடி மையங்களில் 1281 அலுவலர்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 283 வாக்குச்சாவடி மையங்களில் 1391 அலுவலர்களும், சாத்தூர்  சட்டமன்ற தொகுதியில் 286 வாக்குச்சாவடி மையங்களில் 1380 அலுவலர்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 277 வாக்குச்சாவடி மையங்களில் 1350 அலுவலர்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 256 வாக்குச்சாவடி மையங்களில் 1262 அலுவலர்களும், அருப்புக்கோட்டை  சட்டமன்ற தொகுதியில் 255 வாக்குச்சாவடி மையங்களில் 1243 அலுவலர்களும், திருச்சுழி  சட்டமன்ற தொகுதியில் 276 வாக்குச்சாவடி மையங்களில் 1336 அலுவலர்களும் என மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிளில்  1895 வாக்குச்சாவடி மையங்களில் 9243 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News