25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இளம் தலைமுறையினர்களுக்கான, மாநில அளவில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளம் தலைமுறையினர்களுக்கான, மாநில அளவில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி

மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு,  18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், மலைவாழ் மக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, முதல் தலைமுறை வாக்களர்களான கல்லூரி மாணவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வரலாறு, வாக்களிப்பதின் முக்கியத்துவம், தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த வினாடிவினா போட்டியை தொடங்கி வைத்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததவாது:-
இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள், இந்திய தேர்தலின் வரலாறு குறித்தும், தேர்தலில்  ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவம் குறித்தும், ஜனநாயக கடமையை எல்லோரும் ஆற்ற வேண்டும் என்பதின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஜனநாயக நாட்டில் ஒருவர் வாக்களிக்க வேண்டும் என்றால், அதற்கான ஒரே தகுதி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பது மட்டும் தான். நமது நாட்டில் சராசரியாக 70 முதல் 75 விழுக்காடு தான் கடந்த சில தேர்தல்களில் வாக்குப்பதிவு நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக நகர் பகுதியில் வாக்கு சதவீதம் குறைந்து காணப்படுகிறது. நான்கில் ஒரு நபர் வாக்கு அளிப்பதில்லை. நமக்கான ஒரே வாய்ப்பு ஜனநாயக பொறுப்பு என்பது வாக்கை செலுத்துவதுதான்.முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்ட போது எல்லோரும் வாக்களிக்க முடியாது. குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் வாக்குரிமை இருந்தது.இப்போது 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கலாம். நாட்டில் அனைவரும்  சமம். நாட்டின் முதல் குடிமகன் முதல்  ஒரு சாதாரண குடிமகன் வரை ஒரு சமமான உரிமையை உறுதி செய்வது தான் வாக்குரிமை.  அதனால் எல்லோரும் வாக்களிக்க வர வேண்டும். இது நமது ஜனநாயக கடமை குறிப்பாக இளம் தலைமுறையினர் வாக்களிக்க வேண்டும்.

1952 முதல் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. உலகத்திலேயே அதிகமான வாக்காளர்களை கொண்ட நாடாகவும், உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாகவும் நமது நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது.  இந்திய தேர்தல் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையிலும், வாக்களிப்பதின் அவசியத்தை இளம் தலைமுறை, முதல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.இப்போட்டியில் திருச்சி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  இந்த வினாடி வினா போட்டியில் ஒரு குழுவுக்கு மூன்று நபர் வீதம் 60 குழுக்களாக 180 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.போட்டியில் முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டு 30 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. இக்குழுக்களுக்கு இரண்டாம் நிலை தேர்வு நடத்தப்பட்டு 8 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.  அதைத்தொடர்ந்து மூன்றாம் நிலை தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

அதில் விருதுநகர் வே.வ. வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரிக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரிக்கு இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரா கல்லூரி மற்றும் மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.இப்போட்டிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் கழகத்தின் இணை இயக்குனர் டாக்டர் சங்கர சரவணன் அவர்கள் நடத்தினார்.இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) திரு.பிரேம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திருமதி கார்த்திகேயினி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா உட்பட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News