25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ராஜுக்கள் கல்லூரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜுக்கள் கல்லூரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ராஜுக்கள் கல்லூரியும், ராஜபாளையம் சிட்டி கால்பந்து கழகம் இணைந்து நடத்தியது. தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சார்ந்த 36 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டி நாக்அவுட் முறையில் நடைபெற்றது. கால்பந்து போட்டியை கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் குமார் வாழ்த்துரை வழங்கி துவங்கி வைத்தார். அரை இறுதிப் போட்டிக்கு ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி,ராஜபாளையம் சிட்டி கால் பந்து கிளப், சிவகாசி ஆர் எஃப் சி, அருப்புக்கோட்டை எப் சி ஆகிய அணிகள் முன்னேறியது. இறுதிப் போட்டியில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி அணியும், ராஜபாளையம் சிட்டி கால்பந்து கிளப் அணியும் விளையாடியது. இதில் ராஜபாளையம் ரா ஜுக்கள் கல்லூரி முதல் இடத்தையும்,இரண்டாம் இடத்தை ராஜபாளையம் சிட்டி கால்பந்து கழகமும், மூன்றாம் இடத்தை சிவகாசி ஆர் எஸ் சி அணியும், நான்காம் இடத்தை அருப்புக்கோட்டை எப்சி அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு கல்லூரி முதல்வர் ரமேஷ் குமார், பேங்க் ஆப் பரோடா மேலாளர் மகேந்திரன், பேங்க் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா,டைகர் சம்சுதீன் , சக்திவேல் ராஜா ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்க  பரிசுகளை வழங்கினர். இறுதியாக கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குனர் முத்துக்குமார் நன்றி உரை கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News