ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி. P. விஜயலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்க, தாளாளர் திருமதி.ஆனந்தி விருந்தினரை அறிமுகம் செய்து, பரிசுகள் வழங்கி கெளரவம் செய்தார்.
சிறப்பு விருந்தினர் தமது உரையில் , எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் ஆசிரியர் கவனிப்பினிலே. என்ற வரிகளுக்கேற்ப இன்று சமுதாயத்தில் ஒரு நல்ல மாணவனை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு மகத்தானது என்றார்.
ஆசிரியர்கள் மாணவர்களிடம் தோழமையுடனும், மற்ற மாணவர்களுடன் ஒப்பிடாமலும் அவர்களின் மன நிலை புரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறி 'அனைத்து பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கும் தமது ஆசிரியர் தின வாழ்த்தினை தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணிகளாகவும், தன்னை உருக்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வெளிச்சம் காட்டும் மெழுகுவர்த்திகளாக இருக்கிறார்கள் எனவும் கூறினார்.
மேலும் சமுதாயம் நன்கு முன்னேற மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அழகாக எடுத்துக் கூறினார்.
மாணவர்கள் பரதம், உரைவீச்சு, சேர்ந்திசைப் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை அழகாக வெளிப்படுத்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்வில் AKDR பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியைகள் திருமதி.பிரேமா மற்றும் திருமதி. சரஸ்வதி, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திருமதி.ரமணி சந்திரசேகர் ராஜா, திருமதி.கீதா சந்திரன் ராஜா, நிர்வாக அலுவலர் திரு. வெங்கடப்பெருமாள், கலை இலக்கிய பெருமன்ற மாநில உறுப்பினர் திரு. கண்மணி ராசா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆசிரியர்கள் மிக அழகாக விழாவினை ஒருங்கிணைக்க நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
0
Leave a Reply