25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இலக்கிய நிகழ்ச்சியின் சிறப்பும் அதன் பெருமையும்       
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இலக்கிய நிகழ்ச்சியின் சிறப்பும் அதன் பெருமையும்     

 இராஜபாளையம்ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆங்கிலப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர் திரு. இராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நல்கி விருந்தினரை அறிமுகம் செய்ய பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் நினைவுப் பரிசை வழங்கி சிறப்பு செய்தார்.       'படிக்கும் பொழுது நீங்கள்தான் ஆசிரியர்! பரீட்சை எழுதும்போதும் நீங்கள் தான் ஆசிரியர்! உங்களது ஆசிரியரோ பெற்றோர்களோ உங்களுக்கு வெறும் உதவியாளர் தான்!' என்றுரைத்து சிந்திக்க வைத்தார்.       'உங்களுக்கு பிடித்த நபர் யார் என்று முதல் கேள்வி கேட்க அதற்கு ஒரு மாணவி என் அம்மா என்று கூறினார். இரண்டாவது மாணவி எனக்கு என்னைத் தான் பிடிக்கும் என்றார்'. ஆனந்தா வித்யாலயா பள்ளிக்கூட மாணவர்கள் அற்புதமானவர்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறி சந்தோஷப்பட்டார்.      இரண்டாம் கேள்வியாக உங்களுக்கு பிடித்த மூன்று பறவைகள் ஏதேனும் சொல்லுங்கள் என்று கேட்க. ஒரு மாணவன் எனக்கு கழுகு, மயில்,கிளி என்று பதில் கூறினான். அவர் தமக்குப் பிடித்த பறவைகள் மூன்றை வரிசைப்படுத்தினார். அவை சமூகத்திற்கு எப்படியெல்லாம் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சிலாகித்துப் பேசினார். காகம் கிடைத்ததைப் பகிரும். சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யும். கொக்கு வாய்ப்பிற்காக காத்திருக்கும். கோழி இரைக்காக தொடர்ந்து முயற்சி செய்யும். என்பதை சுவைபடக் கூறினார்.      மூன்றாம் கேள்வியாக உங்களுக்கு பிடித்த மூன்று பூக்கள் எவை என்று கேட்டார்? அதற்கு ஒரு மாணவி, தாமரை, செம்பருத்தி, ரோஜா என்று கூறினார். மூன்றும் அழகாக இருக்கும். ஒன்று சாமிக்கு வைக்கப்படும் இன்னொன்று பெண்கள் சூடுவர். அவருக்கு பிடித்த மூன்று பூக்களை கூறினார். அவை வாழைப்பூ, பருத்திப்பூ, எருக்கம்பூ அதில் ஒன்று சாப்பிட மற்றும் ஒன்று உடை தயாரிக்க, அடுத்ததாக மருத்துவத்திற்கு உதவும் என்று கூறினார். அவரின் பொன்னான நேரத்தில் பல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைந்தோம்.      இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் M.S சுப்புலட்சுமி நினைவு இசைப்பள்ளி நிறுவனர் திரு உமாசங்கர் அவர்கள் கலந்து கொண்டு ஒரு பாடலை இசையோடு சொல்லித்தந்து மாணவர்களை பாட செய்து மகிழ்வூட்டினார்.      இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக உற்சாகமூட்டுவதாக அமைந்திருந்தது.                                    

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News