25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முன்னேற விழையும் மாவட்டம்(Aspirational District) தொடர்பாக பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முன்னேற விழையும் மாவட்டம்(Aspirational District) தொடர்பாக பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04.07.2025) முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினருடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினர் 03.07.2025 மற்றும் 04.07.2025 ஆகிய 2 நாட்கள் வத்திராயிருப்பு வட்டத்தில் நியாய விலை கடைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் விருதுநகர் மத்திய உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கினை ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வுக்குப்பின் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து தாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், துணை ஆட்சியர் /மண்டல மேலாளர்(தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) திரு.பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.பாலசுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.உதயசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News