25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கொஞ்சம் கொஞ்சமாக டாலர் மதிப்பு சரியும் அபாயம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொஞ்சம் கொஞ்சமாக டாலர் மதிப்பு சரியும் அபாயம்

 சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தெரிவித்துள்ளார். டாலரை புறக்கணிக்க கடந்த 10 வருடங்களாக இந்த இரண்டு நாடுகள் எடுத்து வந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பொருளாதார உறவுகளில் கிட்டத்தட்ட டாலர் இல்லாத பரிவர்த்தனைகளையே நாங்கள் மேற்கொள்கிறோம், என்று அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே பிரிக்ஸ் நாடுகள் தனியாக ஒரு பணத்தை உருவாக்க உள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். இவர்களின் கடந்த கூட்டத்தில் தனியாக பணத்தை உருவாக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது எண்ணெய் வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும். இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தெரிவித்துள்ளார்.மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்யா வர்த்தகத்திற்காக சீனாவை அதிகம் நம்பியிருப்பதால், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகமும் இந்த ஆண்டு விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த பரிவர்த்தனைகள் 200 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக மிஷுஸ்டின் கூறினார். இதற்கிடையில், ரஷ்யா-அமெரிக்க வர்த்தகம் சமீபத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. 

2022 இல் உக்ரைன் மீதான அதன் முழு அளவிலான படையெடுப்பிற்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மாஸ்கோவை உலக நிதிய அமைப்பிலிருந்து வெளியேற்றியது. இதனால் சீனா- ரஷ்யா இடையே வருத்தம் அதிகம் ஆனது. இதனால் சீனாவின் யுவான் பயன்பாடு இதில் அதிகம் ஆனது. அதோடு யுவானை சர்வதேசமயமாக்கும் முயற்சியில் பெய்ஜிங் சில வெற்றிகளைப் பெற்றுள்ளது. உலகளாவிய பயன்பாட்டில் யுவான் பங்கு ஜனவரியில் 1.9% இலிருந்து அக்டோபரில் 3.6% ஆக உயர்ந்தது.
முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தானை சேர்க்க சீனா அழுத்தம் கொடுத்தது. முக்கியமாக டாலர் பயன்படுத்தும் நாடுகள் , அமெரிக்காவை சார்ந்து வாழும் நாடுகள் இதனால் கடுமையாக பின்னடைவை சந்திக்க நேரிடும். கொஞ்சம் கொஞ்சமாக டாலர் மதிப்பும் இதனால் சரியும் அபாயம் ஏற்படலாம் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News