கைகளில் தோல் உறிய என்னகாரணம்
அடிக்கடி கை உரிதல், வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம், அலர்ஜி, அரிப்பு போன்ற காரணங்களால்தான் கைகளில் தோல் உரிகிறது.
வறண்ட சருமத்தால் அடிக்கடி தோல் உரிகிறதெனில் வெதுவெதுப்பான நீரில் கைகளை10 நிமிடங்கள் மூழ்க வையுங்கள். இதனால் கைகள் மென்மையாகும். வறட்சி நீங்கும்.
விட்டமின்E எண்ணெய்யைகைகளில் தடவி மசாஜ் செய்தால் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். கைகளும் பளபளக்கும்.
கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி கைகளில் மசாஜ் செய்து காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெய்யைகைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் கைகள் பளபளக்கும்.
0
Leave a Reply