25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நீ எதிலிருந்து விடுபட நினைக்கிறாயோ   அவற்றுடனெல்லாம் நீ மேலும் பந்தப்படுவாய்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நீ எதிலிருந்து விடுபட நினைக்கிறாயோ அவற்றுடனெல்லாம் நீ மேலும் பந்தப்படுவாய்

ஏனெனில் சுதந்திரம் என்பது எதற்கும் எதிரானதல்ல

சுதந்திரம் என்பது "எதனிடமிருந்தோ"அல்லது "எதற்காகவோ"அல்ல 

சுதந்திரம் என்பது எதனுடனும் உடன்படுவதுமல்ல 

சுதந்திரம் என்பது கடந்து செல்வது

உடன்பாடு, எதிர்மறை இரண்டையும் கடந்து செல்வது 

சுதந்திரம் என்பது இருமைத் தன்மையிலிருந்து விடுதலை

அங்கு "உடன்பாடு எதிர்மறை"எங்கிருக்கிறது.....???

எதனுடன் சம்பந்தப்படுவது....??? 

எதை எதிர்ப்பது........???

சம்பந்தம் புத்திசாலித் தனமானதல்ல

எதிர்ப்பும் பழையதோடு சம்பந்தப்பட்டதுதான்

ஆகவே, புரிந்துகொள்-சண்டையிடாதே.

சண்டையிடுவதன் மூலம் யாராவது ஏதாவது அடைந்திருக்கிறார்களா......???

வலியைத் தவிர-தோல்வியைத் தவிர

ஆகவே, தப்பி ஓடாதே, பதிலாக விழித்துக்கொள்

தப்பி ஓடுவதனால் ஒருவன் தப்பி ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்

அதற்கு முடிவு இல்லை

அறிதலே சுதந்திரம். பயமல்ல, கோபமல்ல, பகையல்ல, எதிர்ப்பல்ல

தசக்காரிய  வாசியோக சாகா கல்வியை பயின்று இந்த பிரபஞ்ச தலைவனை பற்றியும்  தன்னைப் பற்றியும் அறிதல் மட்டுமே சுதந்திரம்.

 இதுவே சைவ சன்மார்க்கம் காட்டும் பாதை.

 இதில் பயணிக்கும் ஒரு மாணவன் படிப்படியாக அஷ்டாங்க யோகத்தின் முடிவில் ஜீவன் முக்தி, அஷ்டகர்ம யோகத்தின் முடிவில் ஜீவசமாதி, அஷ்டமா சித்தி யோகத்தின் முடிவில் மரணமில்லா பெருவாழ்வு எனும் படிநிலைகளை கடந்து கடவுளாக நிலை மாற்றம் அடைகிறார்

இந்த கலியுகத்தில் அனைவரும் கடவுளாக நிலை மாற்றம் அடைய பர முக்தி அல்லது முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு  தச காரியவாசி யோக சகா கல்விதான் ஒரே வழி!!!

புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம்!!!

 எந்நாளும் சாகாமல் இருக்க கற்பதுவே கல்வி!!

எனவே பணம் சம்பாதிக்கும் சாதா கல்வியுடன் இறைவனுடைய அருளை சம்பாதிக்கும் சாகா கல்வியும் படித்து மரணமில்லா பெரு வாழ்வை அடைய அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே மனிதனாக பிறந்ததின் பயன் சாகா கல்வியை படிக்க தவறியவர்கள் மனிதனாக பிறந்திருக்கவே வேண்டாம் என்கிறது நமது தமிழர் ஆன்மீக மரபு

ஓம் நமசிவாய , திருச்சிற்றம்பலம்.

யோகி ஆடலரசன் ஐயா.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News