25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


“என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, தேர்தல் நாளான ஏப்ரல்-19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்களுக்கு “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சென்றடையும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இளம் தலைமுறை மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு வினாடி வினா, கலந்துரையாடல் நிகழ்ச்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், காபி வித் கலெக்டர், கபாடி, மாரத்தான், போட்டோ பாயிண்ட், செல்பி ஸ்டாண்ட், கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொலைபேசியில் இலச்சினை ஒட்டுதல், இருசக்கர வாகன பேரணி, மிதி வண்டி பேரணி,  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தேர்தல் நாளான ஏப்ரல்-19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்கள் 30 நபர்கள் கலந்து கொண்டு “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த ஜனநாயக திருவிழாவில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்ஃ மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News