“என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, தேர்தல் நாளான ஏப்ரல்-19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்களுக்கு “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சென்றடையும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இளம் தலைமுறை மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு வினாடி வினா, கலந்துரையாடல் நிகழ்ச்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், காபி வித் கலெக்டர், கபாடி, மாரத்தான், போட்டோ பாயிண்ட், செல்பி ஸ்டாண்ட், கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொலைபேசியில் இலச்சினை ஒட்டுதல், இருசக்கர வாகன பேரணி, மிதி வண்டி பேரணி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தேர்தல் நாளான ஏப்ரல்-19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்கள் 30 நபர்கள் கலந்து கொண்டு “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த ஜனநாயக திருவிழாவில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்ஃ மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply