தேவையான பொருட்கள்-1கப் அவல்,1கப் கலர் குடை மிளகாய்,1/2 கேரட் ,3 பீன்ஸ்,சிறிதளவுகோஸ்,சிறிதளவு வெங்காயத் தாள்,1/2ஸ்பூன்மிளகு தூள்,தேவையான அளவு உப்பு,2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்செய்முறை- தடிமனான அவலை எடுத்து தண்ணீரில் அலசி வடிகட்டி 10 நிமிடம் ஓரமாக வைக்கவும்..ஒரு கடாயில் எண்ணெய்விட்டு காய்கறிகளை சேர்த்து மிதமான சூட்டில் அரை பதம் வேக வைக்கவும்.. அதிகமாக வெந்தால் நன்றாக இருக்காது..காய்கறி வதங்கியதும் அதனுடன் நாம் ஊறவைத்த அவலையும் சேர்த்து அத்துடன் மிளகு உப்பு சேர்த்து கலந்து விடவும்..எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் இறுதியாக சிறிது வெங்காயத் தாளையும் சேர்த்து கலந்து விடவும்..இப்போது சூடான சுவையான சத்தான குழந்தைகளுக்கு பிடித்த அவல் ஃப்ரைட் ரைஸ் தயார்... இது குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ப்ரைட் ரைஸ்.
தேவையான பொருட்கள் -1கப் தின் அவல்,1/4 கப் கேரட் நறுக்கியது, 1/4 கப் பீன்ஸ் நறுக்கியது 1/4 கப் பச்சை பட்டாணி, 1/4 கப் தேங்காய் துருவல், 3 பச்சை மிளகாய், 1 பெரிய வெங்காயம்,1/2 கப் தண்ணீர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்,1/4 டீஸ்பூன் கடுகு,1/2 டீஸ்பூன் உளுந்துபருப்பு, 1டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, மல்லி இலை,கறிவேப்பிலை,தேவையான அளவு உப்பு செய்முறை -கொழுக்கட்டை செய்ய தேவையான காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் தயாராக வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும். அவல் எடுத்து தண்ணீரில் சேர்த்து அலசி எடுத்து எடுக்கவும்.பாதி வெந்தவுடன் அவலை காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கலந்து,உப்பு தேங்காய் துருவல்.மஞ்சள் தூள் சேர்த்து,கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இரண்டு நிமிடங்கள் கலந்து விடவும்.பின்னர் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.அதன் பின் எடுத்து கொழுக்கட்டைகளை பிடித்து ஒரு ஸ்டீமர் தட்டில் வைக்கவும்.பின்பு ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் கொழுக்கட்டை வைத்துள்ள தட்டை வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.இப்போது மிகவும் சுவையான, சத்தான, மிருதுவான வெஜிடபிள் அவல் கொழுக்கட்டை தயார்.
தேவையான பொருட்கள்-1-1/2கப் சிவப்பு அவல்,1டீஸ்பூன்மஞ்சள் தூள்,150கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது,5பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது,1டேபிள்ஸ்பூன் இஞ்சி பொடியாக கட் செய்தது,2டேபிள்ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை,1/2கப் தேங்காய் துருவல்,சிறிதளவுகறிவேப்பிலை,1டீஸ்பூன் கடுகு ,உளுத்தம்பருப்பு,4டேபிள்ஸ்பூன் எண்ணெய்1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்,தேவையானஅளவு உப்பு,செய்முறை அவலை நன்கு கழுவி உப்பு சேர்த்து அவல் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிறிது உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் அவலை சேர்த்து நன்கு கிளறவும். பின் கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். அவல்தேங்காய் சாதம் தயார்.
தேவையான பொருட்கள்-1கப்அவல்,1கப்தேங்காய்,1 கப்சர்க்கரை,1/4 கப்பொட்டு கடலை, 4ஏலக்காய், தேவையான அளவுநெய் செய்முறை -அவல், பொட்டு கடலை,ஏலக்காய் வறுத்து சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.தேங்காயை வறுத்து கொள்ளவும்.அரைத்த அவலுடன் தேங்காய்,நெய் சேர்த்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அவல்தேங்காய் லட்டுதயார்.
தேவையான பொருட்கள்-1/2 கப் அவல்,1/4 கப் ரவை,1/4 கப் புளிப்பில்லாத கெட்டி தயிர்,2 டேபிள்ஸ்பூன் துருவிய கேரட்,2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,சிறிதளவுபொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை,தேவையானஅளவு உப்பு,தேவையான அளவு தண்ணீர்செய்முறை -முதலில் அவலை கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.பின் ஊற வைத்த அவலை நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.பின் இதனுடன் ரவை, தயிர் தேவையான அளவு , சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதிகமாக தண்ணீர் சேர்க்க கூடாது. பின்னர் ஊத்தப்பம் சரியாக வராது. அடை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.கேரட் ,வெங்காயம் , கொத்தமல்லி தழை மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். அடுப்பை பற்றி வைத்து தோசை கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பின் மேலாக கேரட் வெங்காய கலவையை பரவலாக தூவி எண்ணெய் சேர்த்து இரு புறமும் வேகவைத்து எடுக்கவும். அவல் ஊத்தப்பம் தயார்.
தேவையான பொருட்கள்-அவல் 1 கப்,உருளை கிழங்கு 2,சீஸ் 1 கட்டி துருவியது,கேரட் 1/4 கப்,பச்சை மிளகாய் 1/2 (பாதி),எலுமிச்சை ஜூஸ் 1/2 பாதி பழம், 3 பிரட் தூள்,இஞ்சி 1 துண்டு,மைதா 2டீஸ்பூன், தண்ணீர்,உப்பு ,மிளகு தூள் 1/4 டீஸ்பூன் ,கரம் மசாலா 1/4 டீஸ்பூன்,சாட் மசாலா தூள் 1/2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்,ஆயில் 1 குழிகரண்டி,கொத்தமல்லி தழைசெய்முறை -பிரட் துண்டுகள்3 மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.அவல் சுத்தம் செய்து கழுவி2,0 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும்.உருளை கிழங்கு வேக விட்டு மசித்து வைக்கவும்.சீஸ் துருவி வைக்கவும்.கேரட் துருவி வைக்கவும்.கழுவி ஊற விட்ட அவலை பிழிந்து வைக்கவும்.இஞ்சி பொடியாக நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய்1 பொடியாக நறுக்கி வைக்கவும்.கொத்தமல்லி தழை சிறிது பொடியாக நறுக்கி வைக்கவும்.எலுமிச்சம் பழம் பாதி எடுத்து வைக்கவும்.கரம் மசாலா1/4 டீஸ்பூன்,மிளகு தூள்1/4 டீஸ்பூன்,சாட் மசாலா1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகாய் தூள்1/4 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.உருளை கிழங்கு மசித்தது சீஸ் ,அவல் ,கேரட் ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,கொத்தமல்லி நறுக்கியது அனைத்து மசாலா தூள் உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.எலுமிச்சை ஜூஸ் கடைசியாக சேர்க்கவும். நன்கு பிசைந்து வைக்கவும்.சிறிய உருண்டை செய்து நடுவில் தட்டை ஆக்கவும்.மைதா மாவு2 டீஸ்பூன் சலித்து தண்ணீர் சிறிது ஊற்றி கட்டி பிடிக்காமல் கலக்கி வைக்கவும்.பிரட் தூள் ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.தட்டையாக உருட்டிய மாவு எடுத்து மைதா கரைசலில் நனைத்து பிரட் தூளில் பிரட்டி தோசை கல்லில் அடுப்பை சிம்மில் வைத்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை ஆயில் சேர்த்து சுட்டு எடுக்கவும். கிறிஸ்பியான கட்லெட் ரெடி.
தேவையான பொருட்கள்- 2 கப் கோதுமை மாவு,2கப்நறுக்கிய வெங்காயம்,1டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்,ஒரு சிட்டிகை சமையல் சோடா,தேவையான அளவு உப்பு,1டீஸ்பூன் எலுமிச்சை சாறு, பொரிப்பதற்கு எண்ணெய்.செய்முறை -ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், நீர் சேர்த்து, சப்பாத்தி மாவை விட கெட்டியாக பிசைந்து ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கிலும் கறிவேப்பிலை கொத்தமல்லி, காரத்திற்கு சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, மாவை சப்பாத்தி போல கல்லில் தேய்த்து வெங்காய கலவையை உள்ளே வைத்து, சமோசா போல மடித்து கட்செய்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி மடித்து வைத்த சமோசாவை போட்டு பொன்னிறமாக எடுத்தால் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-கோதுமை மாவு - 1 கப்அரிசி மாவு - 1/2 கப்வெல்லம் - 1/2 கப் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ)துருவிய தேங்காய் - 1/4 கப்ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்எண்ணெய் - தேவையான அளவுதண்ணீர் - தேவையான அளவு செய்முறை:-ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, மாவுடன் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பணியார மாவு பதத்திற்கு கலக்கவும்.குழிப்பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.மாவு கலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். குறிப்பு:நீங்கள் கார பணியாரம் செய்ய விரும்பினால், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்.சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் பயன்படுத்துவது இன்னும் சுவையாக இருக்கும்.இனிப்பு பணியாரத்திற்கு, நீங்கள் மாவுடன் வாழைப்பழத்தையும் சேர்த்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்-2கப் கோதுமை மாவு,2 ஸ்பூன் வெள்ளை ரவை,1/4ஸ்பூன் மஞ்சள்தூள்,1/4ஸ்பூன் உப்பு,2டீஸ்பூன் எண்ணெய்,1 கப் கடலை பருப்பு,1கப் வெல்லம்,3/4கப் தேங்காய்ப்பூ,3ஏலக்காய் தூள். தேவையான அளவு நெய்செய்முறை-ஒரு பாத்திரத்தில்2கப் கோதுமை மாவு இரண்டு ஸ்பூன் வெள்ளை ரவை இரண்டு ஸ்பூன் எண்ணெய் மஞ்சள்தூள் உப்பு இவற்றை போட்டு சப்பாத்தி மாவு பதத்தை விட இலக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.இந்த பிசைந்த மாவை 30 நிமிடங்கள் ஊறவிடவும்..போலி செய்ய கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற விட்டு குக்கரில்4 விசில் விட்டு இறக்கவும்..கடலைப் பருப்பை மசித்து வைக்கவும்.வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் பூவை நன்றாக வறுத்துக் கொள்ளவும். தேங்காய் பூவுடன் காய்ச்சிய வெல்லப்பாகு சேர்த்து. மசித்து வைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து ஏலக்காய் போட்டு இறக்கி வைக்கவும்.இறக்கி வைத்த போலியை உருண்டையாக செய்து வைத்துக் கொள்ளவும் ஆறியவுடன்.30 நிமிடங்கள் ஊறிய கோதுமை மாவை உருண்டையாக எடுத்து தட்டி அதன் நடுவில் ஒரு போலி உருண்டையை வைத்து சப்பாத்தி அளவுக்கு தேய்த்து வைத்துக் கொள்ளவும்.சப்பாத்தி மாதிரி தேய்த்து அதை தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய் விட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்..
தேவையான பொருட்கள்-1கப்கோதுமை மாவு,1ஸ்பூன்சீரகம்,1ஸ்பூன்மிளகு தூள்,ஒரு கைப்பிடிசுத்தம் செய்த முருங்கைக்கீரை, உப்பு ஒரு தேவையான அளவுசெய்முறை-ஒரு கப் கோதுமை மாவுடன் முருங்கைக்கீரை மிளகு தூள் சீரகம் உப்பு ஆகியவற்றை சேர்த்து ரொட்டி சுடும் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.அடுப்பில் தோசை கல் வைத்து சூடாகியதும் இந்த மாவை ரொட்டி ஆகவோ அல்லது தோசையாகவோ சுடலாம் மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும். சத்தான சீக்கிரம் செய்ய கூடிய முருங்கை கீரை அடை தயார்