25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


சமையல்

Feb 14, 2025

தக்காளி புலவு

தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பெரிய வெங்காயம் -3,தக்காளி -5, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் -2. தேங்காய்ப்பால் அரை கப் (அல்லது) ஆவின் பால் - அரை கப், உப்பு தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி. தாளிக்க: எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், நெய் -ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை லவங்கம், ஏலக்காய் - தலா 1.செய்முறை : அரிசியைக் கழுவி. இரண்டரை கப் தண்ணீரில்ஊறவையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து. தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாயை சேருங்கள். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது, புதினா, மல்லித்தழை, தக்காளி. மிளகாய்தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, தேங்காய்ப்பால், உப்பு, ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்) ஆகிய எல்லாவற்றையும் கலந்து, மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும், 'ஸிம்'மில் வைத்து. ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.

Feb 14, 2025

சீரக புலவு

 தேவையான பொருட்கள் :- பாசுமதி அரசி 2 கப், முந்திரி - 10. பச்சை மிளகாய் -2, உப்பு - தேவையான அளவு. தாளிக்க : சீரகம் ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, நெய் - 4 டேபிள்ஸ்பூன்செய்முறை : பாசுமதி அரிசியை ஊற வைத்து உப்பு சேர்த்து, உதிராக வடித்து ஆறவிடுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். அடிகனமான வாணலியில் நெய்யைக் காயவைத்து, சீரகம், பட்டை தாளித்து முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறுங்கள். முந்திரி சற்று நிறம் மாறியதும், வடித்த சாதம், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். விரைவாக செய்யக் கூடிய, வயிற்றுக்கு இதமான புலவு இது.

Feb 14, 2025

வெஜ் புலவு

தேவையான பொருட்கள் :- பாசுமதி 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3 ,புளித்த தயிர் - கால் கப், தேங்காய்ப்பால் - அரை கப், பட்டாணி (விருப்பப்பட்டால்) - கால் கப், உப்பு தேவையான அளவு. அரைக்க: பச்சை மிளகாய் & தனியா - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு-6-8 பல், கசகசா ஒரு டீஸ்பூன், முந்திரி - 6, பட்டை-1.லவங்கம்- 1. எலக்காய் -1. புதினா ஒரு கட்டு, மல்லித்தழை அரை கட்டு, தாளிக்க: பிரிஞ்சி இலை - 2 நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை : அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பால். இரண்டரை கப்தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.குக்கரில் நெய். எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு தக்காளி, உப்பு சேர்த்து நன்கு கிளறி தேங்காய்ப்பால், தண்ணீருடன் அரிசியைச் சேருங்கள். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 3 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். 

Feb 14, 2025

தனியா பிரியாணி

தேவையான பொருட்கள் - பாசுமதி அரிசி 2 கப், தனியா - அரை கப், தயிர் அரை கப், உப்பு -தேவையான அளவு,பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 4, நெய் -2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்-  ஒரு டேபிள்ஸ்பூன், அரைக்க: புதினா - அரை கட்டு, மல்லித்தழை - அரை கட்டு, பச்சை மிளகாய் 6 ,இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 5 பல், பட்டை ஒரு துண்டு. லவங்கம் - 2 ஏலக்காய் 2. செய்முறை : தனியாவை 4 கப் தண்ணீரில் வேகவையுங்கள். தனியா வெந்து, தண்ணீர் 3 கப் அளவுக்கு வந்ததும், தண்ணீரை வடித்துத் தனியே வையுங்கள். பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைஒன்றாகஅரைத்தெடுங்கள். குக்கரில் நெய். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி தயிர் தனியா வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்து திமிடம் கொதித்ததும் அரிசி சேர்த்து நன்கு கிளறி. மூடி போட்டு ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.

Feb 14, 2025

காளான் புலவு

தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பட்டன் காளான்- 12, பெரிய வெங்காயம் - 2, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுதூள் கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு. தாளிக்க  2: பட்டை லவங்கம், ஏலக்காய் தலா 2, எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை : காளானை இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.பாசுமதி அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீரில் ஊறவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து. பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.பிறகு, காளானையும் சேர்த்து வதக்கி தயிரை அதோடு சேருங்கள். அத்துடன் கரம்மசாலா தூளைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதித்த பிறகு, ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, நன்கு கிளறி மூடிவைத்து, ஒரு விசில் வந்தபிறகு, தீயைக் குறைத்து. ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். விருந்துகளுக்கு ஏற்ற புலவு இது.

Feb 07, 2025

முட்டைகோஸ் ஆம்லேட்.

தேவையான பொருட்கள் - கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், 1 வெங்காயம், பொடியாக வெட்டியது. இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சமிளகாய் பொடியாக வெட்டியது, குடைமிளகாய் நைஸாக வெட்டியது. சேர்த்து வதக்கி விடவும், பின் நைஸாக அவித்த முட்டை கோஸ் அரை சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கி விடவும், நன்றாக சுருண்டு வந்தவுடன் இறக்கி வைக்கவும்.செய்முறை - மாவு அரை கப், கேப்பை அல்லது மைதா மாவு கால் கப்பு சோத்து நன்றாக கலந்து விடவும், இத்துடன் மாவைக் குழைத்து நடுவில் 2 முட்டை உடைத்து போட்டு முட்டையை நன்றாகக் கலந்து விட்டு, பின் 1 கப் பால் விட்டு நன்றாக கலந்து விட்டு மிக்ஸியில் போட்டு நன்றாக நைஸாக அடித்து எடுத்து ஆறிய கோஸ் கலவையை சேர்க்கவும் மல்லி இலை கொஞ்சம், சீரகம் அரை டீஸ்பூன் விட்டு நன்றாகக் கலந்து விடவும். பின் டவாவில் எண்ணெய் தடவி ஆம்லெட்டுகலாக ஊற்றி, பிரட்டி போட்டு வேக வைத்துப் பரிமாறவும். முட்டைகோஸ் ஆம்லெட் சுவையானதும், சத்தானதும் ஆன முட்டைகோஸ் ஆம்லெட் ரெடி தக்காளி சாஸ், அல்லது சில்லி சாஸ் சைட்டிஷ், சுவையாக இருக்கும். 

Feb 07, 2025

கேபேஜ்  எக் நூடுல்ஸ் .

தேவையான பொருட்கள்-  3 பாக்கெட் நூடுல்ஸ், 1/2 முட்டை கோஸ்,6 முட்டை,1 வெங்காயம்,2 பச்சை மிளகாய்,1ஸ்பூன் கடலைப்பருப்பு,சிறிதளவுகறிவேப்பிலை,தேவையானஅளவு உப்பு,1/4ஸ்பூன் மஞ்சள் தூள்,1ஸ்பூன் மிளகு தூள்,3 பாக்கெட்மேகி மசாலா,தேவையான அளவு தண்ணீர்சிறிதளவுகொத்தமல்லி, 2மேசைக்கரண்டி எண்ணெய். செய்முறை  வாணலியில் தண்ணீர் ஊற்றி1 ஸ்பூன் எண்ணெய் விடவும்.1 ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் நூடுல்ஸ் உடைத்து போட்டு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு போட்டு தாளித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு இதில் முட்டை கோஸ் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளவும்.மஞ்சள் தூள், உப்பு, மேகி மசாலா தூள்களை சேர்த்து நன்றாக எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.பின்னர் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.முட்டை சிறிது வெந்ததும் வேக வைத்த மேகி நூடுல்ஸ் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.பின்னர் சிறிது மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.

Feb 07, 2025

முட்டை கோஸ் வடை.

தேவையான பொருட்கள் -1கப் முட்டை கோஸ், மெல்லியதாக, பொடியாக நறுக்கியது.1கப்உளுந்து,1 அங்குலம் தோலுரித்த இஞ்சி,2 பச்சை மிளகாய்,2 மேஜைகரண்டி அவில்,1 சிட்டிகை பெருங்காய பொடி,1 டீஸ்பூன் மிளகாய், பொடி, 1டீஸ்பூன் சுக்கு பொடி,1டீஸ்பூன் கொத்தமல்லி விதை பொடி,1டீஸ்பூன் மிளகு பொடி,1 சிட்டிகை மஞ்சள் பொடி,1டீஸ்பூன் சீரகப் பொடி,தேவையான உப்பு,1/4 கப் கறிவேப்பிலை,1/4 கப் கொத்தமல்லி,தேவையான அளவு  எண்ணை (refined oil உபயோகிக்க வேண்டாம்.)செய்முறை -3 கப் நீரில் உளுந்து ஊறவைக்க வடித்து சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் அறைக்க. மாவு கெட்டியாக இருக்கவேண்டும் ஒரு கிண்ணத்தில் போட்டு அறைத்த உழுந்து மாவுடன், கோஸ்,, ஸ்பைஸ் பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, அவில். சேர்த்து பிசைக. உப்பு பொரிப்பதற்க்கு முன் சேர்க்கஓரு கனமான வாணலியில் எண்ணையை சூடு பண்ணுங்கள். 1/4 கப் மாவை உள்ளங்கையில் சிறிது எண்ணை தடவி தட்டிக்கொள்ளுங்கள். ஜாக்கிரதையாக மெதுவாக வடையை எண்ணையில் சேர்க்க. 4-5 வடைகள் ஒரே சமயத்தில் பொறிக்கலாம். ஜல்லி கரண்டியால் எண்ணையை சூழற்றினால் வடைகள் சமமாக வேகும். 1 நிமிடம் கழித்து திருப்புக.2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். விண்டு பார்த்தால் வெந்துவிட்டதா என்று தெரியும். பேப்பர் டவல் மீது. பொறித்த வடைகளை போட்டால் ஒட்டிய எண்ணையை நீக்கலாம்.சூடான ருசியான சத்தான வடைகள் ருசிக்க தயார்,

Feb 07, 2025

கோஸ் கட்லட்.

தேவையான பொருட்கள் - 200 கிராம் முட்டைக்கோஸ்,இரண்டு சிறிய துண்டுகள் இஞ்சி,2 பல் பூண்டு,2 சிறிய பச்சை மிளகாய்,3ஸ்பூன் கடலை மாவு,இரண்டு ஸ்பூன்கான்பிளவர்,ஒரு ஸ்பூன்அரிசிமாவு,சிறிதளவுசோம்பு,தேவையான அளவு உப்பு,எண்ணெய் ,சிறிதளவுசில்லி சிக்கன் பவுடர்செய்முறை -முட்டைக்கோஸை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.பச்சை மிளகாய் ,இஞ்சி, பூண்டு, சோம்பு, இவற்றை விழுதாக அரைக்கவும். அரைத்த கோஸ் கலவையில் இந்த மசாலாவை சேர்த்து கடலை மாவு, கான்பிளவர் அரிசி மாவு ,உப்பு, சில்லி சிக்கன் பவுடர், கருவேப்பிலை, சேர்த்து கிளறவும்.இந்தக் கலவையை தோசைக்கல்லில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் விருப்பப்பட்ட வடிவத்தில் கைகளால் தட்டி நன்கு வேகவிடவும் இருபுறமும் நன்கு வேகவிடவும். இப்பொழுது மிக மிக ருசியான கோஸ்கட்லட் தயார்.

Feb 07, 2025

முட்டைகோஸ் பக்கோடா

தேவையான பொருட்கள்-1 கப்கடலை மாவு,250 கிராம் முட்டைகோஸ்,1/4 கப் அரிசி மாவு,3 ஸ்பூன்மிளகாய் தூள்,1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு, சிறிதுகறிவேப்பிலை,தேவையான அளவு எண்ணெய்,செய்முறை - நறுக்கிய கோஸ்உடன் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு,கறிவேப்பிலை யுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். சுவையான முட்டைகோஸ் பக்கோடா ரெடி.

1 2 ... 27 28 29 30 31 32 33 ... 52 53

AD's



More News