25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 31, 2024

மாவட்டத்தில் குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் மீது குழந்தை திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும். குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும். குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்படும். குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்படின் காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும்வழங்கப்படும் தண்டனைகள் 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிக பட்சமாக 2 வருட கடும் சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருடம் கடும் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்கடந்த 01.06.2024 முதல் 30.06.2024 வரை இருபத்தி இரண்டு குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நான்கு நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Jul 30, 2024

பெ.புதுப்பட்டி ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம். பெ.புதுப்பட்டி ஊராட்சியில்( 29.07.2024) மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்

Jul 30, 2024

சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாபுரம்  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்  (29.07.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ /மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை  மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1474 பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 91,096 மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்படவுள்ளது.சமூக நலத்துறையின் மூலம், மாவட்டத்தில்  6 தையல் கூட்டுறவு அமைப்பில் உள்ள மகளிர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு குழந்தைக்கும் அளவெடுத்து, தைத்து பின்னர் நேரடியாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.அதன்படி விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாபுரம்  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்   சத்துணவு உண்ணும் 143 பள்ளி மாணவ /மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.

Jul 30, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், அவர்கள் தலைமையில் (29.07.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.  இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.6000/- வீதம் மொத்தம் ரூ.18,000/-மதிப்புள்ள தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து,   மாவட்ட பிற்படுத்தப்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திருமதி இ.கார்த்திகேயனி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, அரசு அலுவலர்கள் மற்றும்  பொதுமக்கள் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

Jul 30, 2024

வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகைக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்கள் பெற முன்பதிவு செய்ய உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்கள்  வாடகைக்கு வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மானாவாரி, கிணறு மற்றும் குளத்துப் பாசன விவசாயத்தில், நில உழவுப் பணியிலிருந்து அறுவடை பணிகள் வரை இயந்திரங்களைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள ‘வேளாண்மை இயந்திர மயமாக்கல்” பணிகளை வேளாண்மைப் பொறியியல் துறை  மேற்கொண்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல்  துறையில் உழுவை இயந்திரம் 7 எண்களும், மண் தள்ளும் இயந்திரம் 2 எண்களும,; ஜெசிபி இயந்திரம் 2 எண்களும், பொக்லைன் இயந்திரம் 1 எண்ணும் மற்றும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் 1 எண்ணும் அரசு நிர்ணயம் செய்த மிகக் குறைந்த வாடகையில் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றது.குறிப்பாக, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு  இயந்திரங்கள்  வாடகைக்கு வழங்கும் திட்டத்தில், உழுவை  இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- க்கும், மண் தள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1230/- க்கும்,  ஜெசிபி இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.890/- க்கும், பொக்லைன் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1910/- க்கும், தேங்காய் பறிக்கும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.450/- க்கும் (எரி பொருள் மற்றும் ஓட்டுநர் செலவு உட்பட) மிகக் குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உழுவை இயந்திரங்களில் இணைப்பு கருவிகளாக, சட்டிக் கலப்பை, 5 கொலுக் கலப்பை, 9 கொலுக் கலப்பை, சுழல் கொத்துக் கலப்பை, சோளத்தட்டை அறுவடை கருவி, நேரடி விதை விதைக்கும் கருவி,  தென்னை தோகைகளை துகள்களாக்கும் கருவி, வாய்க்கால் வெட்டும் கருவி, வைக்கோல் வாரி, வைக்கோல் கட்டும் இயந்திரம் என பல்வேறு புதிய புதுமையான தொழில்நுட்பக் கருவிகளும், டிராக்டருடன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- எனும் குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிறுபாசன திட்டத்தில் நிலத்தடி நீர் ஆய்வு பணிக்கு, ஒரு பணியிடத்திற்கு ரூ.500/- எனும் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு ஆய்வு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்ட விவசாயிகள், நேரடியாக உழவன் செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களை தங்களது வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர், அலைபேசி எண்: 82202-53460 ஐயும் திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும்  சாத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, வி.பி.எம்.எம் கல்லூரி எதிரில், கிருஷ்ணன்கோவில், அலைபேசி எண்: 79041-25715- யை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்

Jul 30, 2024

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் சூரிய சக்தியால் தனித்து இயங்கும் மோட்டார் பம்ப் செட்டுகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

2019-20 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் சூரிய சக்தியால் தனித்து இயங்கும்  மோட்டார் பம்ப் செட்டுகள் மானியத்தில்  வழங்கும் திட்டம்,  விருதுநகர் மாவட்டத்தில்  வேளாண்மை பொறியியல் துறை மூலம் திறந்த வெளி கிணறுகள்  மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் சூரிய சக்தியால்  இயங்கும் மோட்டார் பம்புகள்  தனிப்பட்ட பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு  60 சதவிகிதம்  அரசு மானியத்துடனும்,  ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்துடனும் மற்றும் சிறு குறு ஆதிதிராவிட வகுப்பினருக்கு 80 சதவீத மானியத்துடனும் செயல்படுத்துவதற்கு மொத்தம் 60 எண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டம் மாநில அரசு நிதி, மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை திட்டம் , தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தின் நிதி ஆதாரத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 5ஹெச்பி  முதல் 10 ஹெச்பி வரை  மோட்டார் பம்ப் செட்டுகள்  அமைத்து தரப்படும்.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு, நுண்ணீர் பாசனத்துடன் இணைத்திட உறுதிமொழிக் கடிதம் அளிக்க வேண்டும். வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள், கான்கிரீட்  காரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50  மீட்டருக்குள், நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். மேற்படி தொலைவு வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் பொழுது  பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்றினை இணைத்திட வேண்டும்.  இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள  விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி,  நரிக்குடி வட்டார  விவசாயிகள்  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகத்திலும் (கைபேசி எண்: 82202-53460), சாத்தூர், சிவகாசி வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள் கிருஷ்ணன் கோவில், வி.பி.எம்.எம் கல்லூரி எதிரிலுள்ள உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகத்திலும் (கைபேசி எண்:  79041-25715) தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அளித்து பயன்பெற வேண்டுமென என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jul 29, 2024

. பெண்  குழந்தைகளை, பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும்  பயிற்சி கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (27.07.2024) சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில்  பெண்  குழந்தைகளை, பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும்  பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

Jul 29, 2024

Coffee With Collector” என்ற 88-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (27.07.2024) திருத்தங்கல், A.A.A இண்டர்நேஷனல் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 40 தனித்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற ‘‘Coffee With Collector” என்ற 88-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில்  கல்வி,  பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில்  மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 88-வது முறையாக பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு, வீரர்கள், அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களும் தங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவம், வழக்கறிஞர், தொழிலதிபர், விளையாட்டு வீரர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர்.மாணவர்கள் ஒரு செயலை தொடர்ந்து விருப்பத்துடன் செய்தால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும். மாணவர்கள் கல்வி கற்பதற்கான ஆவர்த்தை பொறுத்தே கல்வி கற்கும் திறன் வளர்கிறது. அதே போல் ஒருவர் புரிந்து படிப்பதற்கும், மனப்பாடம் செய்து படிப்பதற்குமான வேறுபாடுகள் நம்மிடையே உள்ளது . எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதையும், சுருக்கமாக படித்து ஞாபகப்படுத்தி கொள்வது பற்றியும்,  படிப்பதனால் தன்னுடை அறிவுத்திறனை மேம்படுத்தி சமூகத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தி உயர் கல்வி மற்றும் அரசு தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி அடைவதற்கான வழிகாட்டுதல்களையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.

Jul 27, 2024

திருவில்லிபுத்தூரில் அருள்மிகு ஆண்டாள் திருக்கோவில் திருத்தேர் வலம் வரும் பகுதியில் மேல்நிலை மின் கம்பிகள் புதைவட மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளதை அமைச்சர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அருள்மிகு ஆண்டாள் திருக்கோவில் திருத்தேர் வலம் வரும் பகுதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.1.82 கோடி மதிப்பில் மேல்நிலை மின் கம்பிகள், புதைவட மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளதை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற கூட்ட தொடரில் எரிசக்தித் துறை மானிய கோரிக்கையில் விருதுநகர்  மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆண்டாள் திருக்கோவில் ரத வீதிகளில் உள்ள மேல் நிலை மின் கம்பிகள், புதைவட மின்பாதைகளாக மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.அதன்படி தெற்கு மற்றும் மேற்கு ரத வீதிகளில் மேலே செல்லும் 1.8 கி.மீ. நீள தாழ்வழுத்த மின்கம்பிகளை, 1.524 கி.மீ  நீள புதைவட மின்பாதைகளாக மாற்றம் செய்ய மதிப்பீடு அனுமதி பெறப்பட்டு, ரூ.1.82 கோடி செலவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் தேரோட்டத்தின் போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்வதால், மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைப்பதன் மூலம் இந்த பகுதிகளில் மின்விபத்து முற்றிலும் தடுக்கப்படும். மேலும், பொது மக்களுக்கு மின்விநியோகம் தடைபடாமல் வழங்கப்படும் .அதன்படி, இந்த மேல்நிலை மின் கம்பிகள் புதைவட மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளதை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்;ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திருமதி லதா, செயற்பொறியாளர்திரு.முனியசாமி(திருவில்லிபுத்தூர்), திருவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.ரவிக்கண்ணன், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.கு.ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Jul 27, 2024

சிவகாசி சாட்சியாபுரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை(இரயில்வே திட்டப்பணிகள்) சார்பில், புதிய இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு,  அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்  

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாட்சியாபுரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை(இரயில்வே திட்டப்பணிகள்) சார்பில், ரூ.61.74 கோடி மதிப்பில் புதிய இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்(26.07.2024) அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்கள்.தமிழ்நாடு பாரம்பரியமாக வலிமையான தொழில் அடித்தளம் பெற்று விளங்குவதால் நாட்டின் தொழில் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அங்கங்களான தொழில்துறை, தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தமிழ்நாட்டில் சாலை கட்டமைப்பு மற்றும் சிறு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, பாதுகாப்பான பயணம் மற்றும் நெரிசலற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் மாநிலத்தின் நெடுஞ்சாலை தொடரமைப்பு உருவாக்குவது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் செயலாற்றி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அடர்ந்த மக்கள்தொகையும், ஏராளமான பட்டாசு மற்றும் அச்சுத் தொழிற்சாலைகள் கொண்ட ஒரு தொழில் நகரமாகும். சாட்சியாபுரம் கடவு எண் 427-ல் உள்ள பாதை இரயில் போக்குவரத்திற்காக அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதி பல தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் இயக்கும் இடமாக இருப்பதால், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.இதனை கருத்தில் கொண்டு, இன்று திருவில்லிபுத்தூர் - சிவகாசி - விருதுநகர் -அருப்புக்கோட்டை - திருச்சுழி - நரிக்குடி - பார்த்திபனூர் சாலை 18ஃ4-ல் கடவு எண்.427-க்கு மாற்றாக இரயில்வே கி.மீ. 563ஃ100 - 563ஃ200-ல் சிவகாசி மற்றும் திருவில்லிபுத்தூர் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுமார் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் இந்த சாலையினை பயன்படுத்தும், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திருவில்லிபுத்தூர், இராஜபாளையம்  ஆகிய நகரங்களுக்கு தடையில்லாமல் எளிதாக செல்ல முடியும்.எனவே, இந்த பகுதியில் இடையூறு இல்லாமல் போக்குவரத்தை தடையின்றி மேம்படுத்துவதற்கு இந்த இரயில்வே மேம்பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவித்தனர்.மேலும், இந்த சாட்சியாபுரம் புதிய பாலம் விரைந்து கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், சிவகாசியில் வெளி சுற்றுச்சாலை, திருத்தங்கல் மற்றும் சாத்தூரில் மேம்பாலங்கள், மல்லாங்கிணர் மற்றும் வத்திராயிருப்பில் புறவழிசாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எளிதாக சென்றுவர ஏதுவாக தேவையான இடங்களில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும்  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தனர்.

1 2 ... 27 28 29 30 31 32 33 ... 69 70

AD's



More News