தமிழ்நாடு மாநில ஊரக,நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 07.03.2026 அன்று நடைபெறவுள்ளது .
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் திருவிழா 07.03.2026 (சனிக்கிழமை) அன்று மிளகாய் வத்தல் வியாபாரிகள் திருமண மண்டபம், அல்லம்பட்டி விலக்கு, அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகரில் வைத்து காலை 10.00 மணிமுதல் மாலை 3.00 வரை நடத்தப்படவுள்ளது.
இம்முகாமில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தனியார் துறை நிறுவனங்கள் இளைஞர்களை நேர்முகத்தேர்வு செய்து வேலை வாய்ப்பை வழங்கிடவும், தீன் தயாள் உபாத்யாய் கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களை பயிற்சிக்கு தேர்வு செய்திடவும் உள்ளனர்.
இம்மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாமில், விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ ஐ.டி.ஐ / டிப்ளமோ மற்றும் தொழிற்கல்வி பயின்ற 40 வயதுக்குள்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தங்களது கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை உள்;ளிட்ட இதர தகுதி சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்) கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புக்களை பெறவும், இளைஞர் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு முதல் பொறியியல் வரை படித்த 35 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தங்களது கல்வி சான்று, குடும்ப அட்டை இதர ஆவனங்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சியை பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புர வாழ்வாதார இயக்கம், தரை தளம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரியில் அனுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply