25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jan 27, 2026

16-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர்  மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (25.01.2026) தேர்தல் பிரிவின் மூலம் 16-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல் ஆணையர் அவர்கள் வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி காட்சிகளை மாணவர்கள் பார்வையிட்டனர்.மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியம், கோலம்  உள்ளிட்ட போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார். பின்னர், புதிய வாக்காளர்களாக பதிவு செய்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ ரமணாஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவி எஸ்.சண்முகபிரியா என்பவர் உரையாற்றினார்.மேலும், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பந்தல்குடி கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பெ.கவிதா என்பவர் கட்டுரை வாசித்தார்.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கம் தேர்தல் ஆணையம். இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளான ஜனவரி 25 ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக 2011ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தகுதியுள்ள அனைவரையும் விடுதலின்றி வாக்காளராகப் பதிவு செய்வதன் மூலம் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் தேர்தல் நடைமுறைகளில் குடிமக்களின் பங்கெடுப்பை அதிகரிப்பது ஆகியவையே இந்நாளினைக் கொண்டாடுவதன் நோக்கமாக உள்ளது. 18-வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களும் வாக்காளராகப் பதிவு செய்து கொண்டு உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தில் பங்கெடுக்க இயலும். தமிழ்நாட்டில்  சிறப்புத் தீவிரத் திருத்த முறையில் புதிதாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி முன்னதாக 16,26,485 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது, சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வரைவு பட்டியலில் 14,36,521 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இதில் தங்களது பெயர் சரியான முறையிலும் சரியான இடத்திலும் பதிவாகி உள்ளதா என்றும் சரிபார்த்து, பெயரை சேர்த்துக் கொள்ளவோ, தேவை ஏற்பட்டால் திருத்தங்கள் செய்து கொள்ளவோ வேண்டும்.நமது நாட்டை ஆட்சி செலுத்தும் ஆட்சியாளர்களை குடிமக்களாகிய நாமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுப்பதே மக்களாட்சி.நமக்கு தேவையான படிப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளும் நாம் தேர்ந்தெடுக்கூடிய தலைவர்களால் உருவாக்கக் கூடிய கொள்கைகளால் தான் கொண்டு வரப்படுகின்றன.அப்படிப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க நம்முடைய வாக்குகளை நாம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். நடைபெறும் தேர்தல்கள் மக்களுக்கு தேவையான சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் அமைதியானதாகவும் நடைபெற குடிமக்கள் அனைவரும் சீரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.தேர்தல்களில் அச்சமின்றியும், மதம், சாதி, இனம், வகுப்பு மற்றும் மொழி ஆகிய பாகுபாடு இல்லாமல் வாக்களிக்க வேண்டும். மேலும் எந்தவொரு தூண்டுதலுக்கு ஆளாகாமல் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம், நமது நலன் கருதும் மரபுகளைக் காப்பதுடன் தேர்தல்களின் மாண்பை நிலை நிறுத்துவோம்.இந்திய ஜனநாயகம் என்றென்றும் துடிப்புடன் இயங்க, அதன் இதயமாக உள்ள வாக்காளர்களாகிய நாம், வாக்காளர் என்பதில் பெருமை கொள்வதோடு, 100 சதவீதம் விடுதலின்றி நேர்மையாக வாக்களிப்போம் எனவும் பெருமிதம் கொள்வோம் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நமது இலக்கு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து,  16- வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்தமாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு மையத்தினையும், வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.மேலும், 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்டில்(Selfei Stand) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புகைப்பட எடுத்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, தேர்தல் வட்டாட்சியர் திரு.ரமணன்,  அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திரு.செந்திவேல், எஸ்.பி.கே.கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.இராதா,  கல்லூரி செயலாளர் திரு.ஆசைத்தம்பி, எஸ்.பி.கே. பள்ளி செயலாளர் திரு.காசிமுருகன்,அரசு அலுவலர்கள்,  பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 27, 2026

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.01.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கள ஆய்வு மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் தருணங்களில், அக்குழந்தைகளுக்கு முறையாக ஆலோசனை வழங்கி அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்.தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆற்றுப்படுத்துநர்கள் கட்டாயம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பள்ளி படிப்பினை இடைநிறுத்தம் செய்த குழந்தைகள் தான் சட்டத்திற்கு முரணான குழந்தைகளும், குழந்தைத் தொழிலாளர்களாகவும் மாறும் சூழ்நிலைகள் உள்ளதால் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அவர்கள் தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை எடுக்கவேண்டும்.                     மேலும், தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 2014-ன்கீழ் மாவட்டத்தில் பள்ளிகளின்கீழ் செயல்படும் பள்ளி விடுதிகள் அனைத்து பதிவு மற்றும் உரிமச்சான்று பெற்று இருக்கவேண்டும். அவ்விடுதியினை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நலஅலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியப்படும் பட்சத்தில், அக்குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழு முன் ஒப்படைத்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அக்குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகள் நலக்குழு முன் ஆஜராகும் வகையில் ஆணை பிறப்பித்து ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மனவள ஆலோசனைகள் வழங்கவேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக, விருதுநகரில் செயல்பட்டு சரஸ்வதியம்மாள் லையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பென்டகன் கார்மெண்ட்ஸ் நிறுவனங்களை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.இக்கூட்டத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் திருமதி ஆர்.ஜெயசுதா மற்றும் திருமதி உஷா நந்தினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா,  முதன்மை கல்வி அலுவலர் திரு,அரவிந்தன், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.திலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Jan 27, 2026

விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை மற்றும் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்து கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை ஊராட்சியில், சிவகாசி வட்டம்  செவலூர் ஊராட்சியில்   (24.01.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய கர்ப்பிணி தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை மற்றும் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்து கலந்துரையாடினார்.

Jan 27, 2026

வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (24.01.2026) வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் - 2026 ஐ முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒரு வாகனம் வீதம் மொத்தம் 7 வாகனங்கள் மூலம் இளம் வாக்காளர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து  செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில்விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர்  அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த வாகனங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிப்பதோடு, வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கவுள்ளது.எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்கள் பகுதிகளுக்கு வரும் இந்த வாகனங்களை பயன்படுத்தி வாக்குப்பதிவு குறித்த செயல் விளக்கத்தை அறிந்து கொண்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். 

Jan 27, 2026

ஒன்றிய அளவில், “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடைபெற உள்ளன.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் 25.1.2026 முதல் 27.1.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த அனைத்து (11 தொகுதிகள்) ஊராட்சி ஒன்றிய அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளது.இந்த விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.3,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.1,000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.இவற்றில் முதலிடம் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். மேலும் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் வட்டார (BLOCK LEVEL) அளவிலான விளையாட்டுப் போட்டிகள் விருதுநகர் மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெற உள்ளன. இராஜபாளையம் வட்டத்தில், பு.மூ.மாரிமுத்து நாடார் ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, தளவாய்புரம்  காலை 08.00 மணியளவில், 25.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டி 100 மீ (பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டி குண்டு எறிதல் (பெண்கள்,) கேரம் (இரட்டையர்கள்) (பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்), கபாடி(பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி(பெண்கள்), எறிபந்து (பெண்கள்), உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டி 100 மீ (ஆண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டி குண்டு எறிதல் (ஆண்கள்) கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள்), கையுந்து பந்து(ஆண்கள்), கபாடி(ஆண்கள்), கயிறு இழுத்தல் போட்டி(ஆண்கள்), மட்டைப்பந்து (ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், திருவில்லிபுத்துார் வட்டம், மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளி, திருவில்லிபுத்தூர், காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) ஆண்கள் மற்றும் பெண்கள், கபாடி(பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), எறிபந்து (பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி(ஆண்கள்), கையுந்து பந்து(ஆண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன. சிவகாசி வட்டம், அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரி, சிவகாசியில், காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) கபாடி(பெண்கள்) கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்) கையுந்து பந்து(ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்), (ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), கபாடி(ஆண்கள்), எறிபந்து (பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், வெம்பக்கோட்டை வட்டம், P.S.R. பொறியியல் கல்லுாரி, அய்யநாயக்கன்பட்டி, காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி(பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன. நரிக்குடி வட்டம், மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், நரிக்குடி முக்கு ரோடு, காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று எறிபந்து (பெண்கள்), கபாடி(பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும், குண்டு எறிதல்)  (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) பெண்கள், கேரம் (இரட்டையர்கள்) ஆண்கள் உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி(ஆண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து(ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், திருச்சுழி வட்டம், S.B.K மேல்நிலைப் பள்ளி, கல்லுாரணி காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), எறிபந்து (பெண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன. காரியாபட்டி வட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லாங்கிணறு, காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) ஆண்கள், கேரம் (இரட்டையர்கள்) ஆண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து ஆண்கள், கபாடி ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி ஆண்கள் உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) ஆண்கள், கேரம் (இரட்டையர்கள்) ஆண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து ஆண்கள், கபாடி ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி ஆண்கள், தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) பெண்கள், கேரம் (இரட்டையர்கள்) பெண்கள், எறிபந்து பெண்கள், கையுந்து பந்து பெண்கள், கபாடி பெண்கள், கயிறு இழுத்தல் போட்டி பெண்கள் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.விருதுநகர் வட்டம், செந்திகுமாரநாடார் கல்லுாரி, விருதுநகர், காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கபாடி ஆண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்), (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி பெண்கள், எறிபந்து பெண்கள், கையுந்து பந்து பெண்கள் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், சாத்துார் வட்டம் SRNM கல்லுாரி, சாத்துார், காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கபாடி பெண்கள், கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி ஆண்கள், தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), எறிபந்து பெண்கள் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன. வத்ராயிருப்பு வட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி கூமாபட்டி, காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி ஆண்கள், கையுந்து பந்து ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்), ஆண்கள் உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று மட்டைபந்து (ஆண்கள்), எறிபந்து பெண்கள், கபாடி பெண்கள், தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) பெண்கள்  உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், அருப்புக்கோட்டை வட்டம் ஸ்ரீ செளடாம்பிகை பொறியியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை, காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) பெண்கள், எறிபந்து பெண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன., கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள இராஜபாளையம் வட்டம் திரு.K.மணிரத்தினம், (Cell:9940908430), திருவில்லிபுத்தூர் வட்டம் திரு. R.சுப்ரமணியன் (Cell:9751393412), சிவகாசி வட்டம் திரு. P.கார்த்திக், குத்துச்சண்டை பயிற்றுநர் (Cell:7339594617), வெம்பக்கோட்டை வட்டம் திரு. மகாராஜா (Cell:8667233423), நரிக்குடி வட்டம் திரு. நாகர்ஜீன் (Cell: 8939101902),  திருச்சுழி வட்டம் திரு.ஆறுமுகம் Cell:9655849601), காரியாபட்டி வட்டம் திரு. எம்.ரஞ்சித் (Cell:7530082477), விருதுநகர் வட்டம் திரு.நாகேந்திரன் (Cell:8940904377), சாத்துார் வட்டம் திருமதி. ஆர்.நாகஜோதி (Cell:9500760243), வத்ராயிருப்பு வட்டம் திரு.எம்.அருள்போஸ் (Cell: 9488887989), அருப்புக்கோட்டை வட்டம் திரு.பிரகதீஸ்வரன் (Cell: 8610515749) என்ற அந்தந்த வட்டாரப் பகுதி எண்களை தொடர்பு கொள்ளலாம்.எனவே, மேற்கண்ட போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 24, 2026

விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (23.01.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள்  கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளின் வங்கி கணக்கில் 3 நாட்களில் பணம் வரவு வைக்கப்படும் என மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம்) அவர்களால் தெரிவிக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பயிர் கடன், வழங்கவும், கண்மாயில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும்,  பல்வேறு நகராட்சிகள்,மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்எனமாவட்டஆட்சியர்அவர்கள்அறிவுறுத்தினார்கள்.வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் கிராம அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.விவசாயிகளுக்கு காட்டுப் பன்றிகளால் அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடித்திட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.  இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,), திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி மு.சுமதி,    திரு.மோகன்தாஸ் சௌமியன் வேளாண்மை இணை இயக்குநர், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, அரசு அலுவலர்கள்  மற்றும்  விவசாய பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 24, 2026

தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர்அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (23.01.2026) தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட 1950-சனவரி-25 தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி-25 தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதனடிப்படையில், மாவட்ட அளவில் பல்வேறு வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “எனது இந்தியா” என்ற தலைப்பில் “இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு,மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் என்ற உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.

Jan 24, 2026

வள்ளலார் இராமலிங்கனார் நினைவு தினமான 01.02.2026 அன்று ஒரு நாள் மட்டும் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A  மற்றும் FL-11  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி வள்ளலார்  இராமலிங்கனார் நினைவு  தினமான 01.02.2026 ஞாயிற்றுக் கிழமை  அன்று (ஒரு நாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A   மற்றும் FL-11  ஆகிய மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின்  மீது (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.       

Jan 24, 2026

தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் 29.02.2026 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.  விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரேவிண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்கவேண்டும். மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.மேலும், கூடுதல் விவரங்களை, 044 -22501006 (113) என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது detischennai@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 23, 2026

தூய்மை பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, ராக்லாண்ட் நினைவு திருமண மண்டபத்தில்  (22.01.2026) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப்பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டு கழகம் (தாட்கோ) சார்பில், 40-தூய்மை காவலர்களுக்கு நல வாரிய அட்டைகளையும், 2-தூய்மை காவலர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.1,000/- வீதம் மொத்தம் ரூ.2,000/-னையும், சிவகாசி மாநகராட்சி சார்பில் 370 தூய்மை காவலர் மற்றும் பணியாளர்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும்  தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம் மூலம் நிதியை ஒதுக்கீடு செய்து, அதனை முழுவதும் தூய்மை பணியாளர்கள் நலத்திற்கும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் தான் செலவழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.இந்த நலவாரியத்தில் தூய்மைப்பணியாளர்கள் பணியின் போது மரணமடைந்தால் ரூ.5 இலட்சமாக இருந்த தொகையை, ரூ.10 இலட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. இயற்கை மரணமடையும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரமாக இருந்த தொகையினை ரூ.1 இலட்சமாகவும், தூய்மைப்பணியாளர் பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25 ஆயிரத்தினை ரூ.50 ஆயிரமாகவும், குழந்தைகளின் கல்விக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500/-னை ரூ.3,000/- ஆகவும் உயர்த்தி வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.அதுமட்டுமல்லாமல், தூய்மைப்பணியாளர் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை, கலைஞர் கனவு இல்லத்தில் சிறப்பு முன்னுரிமை, தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவத்திட்டம் என்று ஒவ்வொரு திட்டமாக தேடிப் பிடித்து உங்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடனுடன் இருக்க வேண்டும்.மேலும் தூய்மை பணியாளர்கள் ஆகிய நீங்கள் உங்களுடைய குழந்தைகளை தயவு செய்து படிக்க வையுங்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்களுக்காக பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.அதனால் உங்களுடைய குழந்தையை படிக்க வையுங்கள், கையுறை, முக கவசத்தை பயன்படுத்தி நோய் நொடி இல்லாமல் பாதுகாப்பாக இருங்கள். மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு முகாம்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதை பயன்படுத்திக்கொண்டு உங்களது உடல் நலத்தை பேணி பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதற்கு என்றைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியமானது, தூய்மை காவலர் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் முறையாக சென்றடைகிறதா என்பது குறித்து மாவட்டந்தோறும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு அதை உறுதி செய்து வருகிறது. மேலும், அவர்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்தும், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், இன்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் மூலம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.இம்மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு மேற்கண்டவாறு பலன்கள் வழங்க ஏதுவாக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் application.tncwwb.com என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்திடவும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், நமது மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் பல்நோக்கு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. உங்களுடைய கிராம பஞ்சாயத்தில் நடைபெறுகின்ற முகாமில் கலந்து கொண்டு, உங்களுடைய உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ போன்ற எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். அதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் தூய்மைப் பணியாளர்களுக்கென்று தனியாக சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொண்டு, நல வாரிய அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை போன்றவைகளை பெற்று பயனடையலாம். தமிழ்நாடு அரசின் மூலம் தூய்மைப்பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன், தாட்கோ மேலாளர் திருமதி மஞ்சுளா, சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, மாநகர் நல அலுவலர் மரு.ஸ்ரீ.தேவி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், சிவகாசி மாநகராட்சி மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 36 37 38 39 40 41 42 ... 138 139

AD's



More News