25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 10, 2024

‘Coffee With Collector” என்ற 76-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.07.2024) கே.வி.எஸ். ஆங்கிலப் பள்ளியில்  11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector”    என்ற 76-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 76-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களிடம் அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

Jul 10, 2024

வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி (Induction Programme) வகுப்புகள்

விருதுநகர் மாவட்டம்,  வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் (09.07.2024)  கல்லூரிக் கல்வித் துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி (Induction Programme) வகுப்புகள் மாவட்டஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பள்ளிக் கல்வியைச் சிறப்பாக முடித்துவிட்டுக் கல்லூரிகளுக்குள் கனவுகளுடன் வந்திருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியின் அனைத்துக் கிளைகளிலும் ஊக்குவித்து ஒளிமயமான எதிர்காலம் நோக்கி ஆற்றுப்படுத்துவது, எதிர்காலத்திற்குப் பயன்படும் வளமான நம்பிக்கைகளை அளிப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் வலுவான தாக்கங்களை நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனையாளர்களை கொண்டு, புதுமுக மாணவர்களுக்கு மனம் திறந்த உரையாடல் வாயிலாகவும், வினா-விடை நிகழ்வாகவும் ஒருங்கிணைப்பதன் வழிப் புதுமுக மாணவர்களின் அறிவும் உணர்வும் பக்குவப்படுத்தப்பட்டு, அவர்களின் இலக்கு நோக்கிய வெற்றிப் பயணத்தை வழிகாட்டுவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.18 வயது நிரம்பிய பிறகு ஒருவருக்கு உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன. ஒரு கல்லூரி பருவம் என்பது குழந்தை பருவத்தில் இருந்து அடுத்து ஒரு சராசரியாக 60 ஆண்டுகள். நம்முடைய சராசரி வாழ்நாள் இந்தியாவில் 73 1ஃ2 வருஷம். நாம் ஒரு 80 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வோம் என்று சராசரியாக எடுத்துக் கொண்டோம் என்றால், அடுத்து ஒரு 60 ஆண்டுகள் இந்த பூமியில் நீங்கள் வாழ்வதற்கு  தேவையான வாழ்வுக்கு உங்களை தயார் செய்வதுதான் இந்த கல்லூரி படிப்பினுடைய நோக்கம். ஒவ்வொருவருக்கும்; மூன்று விதமான வாழ்க்கை உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தொழில் சார்ந்த வாழ்க்கை  ஆகும்.தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவரவருடைய குடும்பம், உறவினர்கள் சம்பந்தப்பட்டது.  ஒரு நாளைக்கு 8-லிருந்து 10- மணி நேரம் வரை தொழில்சார்ந்த வாழ்க்கைக்கு நாம் செலவிடுகிறோம். தொழில் சார்ந்த வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும்  இடையில் இடைவெளி இருப்பது தான் சமூக வாழ்க்கை.சமூகவியல் மனிதருக்கான இலக்கணத்தை சொல்கின்ற பொழுது மனிதன் ஒரு சமூக விலங்கு. அது ஏன் சமூக விலங்கு என்று குறிப்பிடுகிறார்கள் என்றால் இந்த சமூகத்தில் சில நியதிகளோடு வாழ வேண்டும். சமூகத்தில் பல நேரங்களில் எழுதப்படாத சட்டங்களுக்கும் எழுதப்படாத மரபுகளுக்கும் நாம் கட்டுப்பட்டு வாழக்கூடிய சூழ்நிலைகளை சமூகம் உருவாக்கும்.மாணவர்கள் கல்லூரியில் நன்கு படிப்பதன் மூலம் உங்களின் அறிவு பெருகும். அறியாமை என்ற இருள் போகும், புது சிந்தனைகள் உருவாகும். படித்ததை வாழ்வியலோடு  தொடர்புப்படுத்தி அவற்றை பயன்படுத்த முடியுமா என்று யோசிக்க முடியும். படிப்பின் மூலமாக பெறக்கூடிய அறிவின் மூலமாக நாளை ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதற்கோ, அல்லது தொழில் தொடங்கி நடத்துவதற்கோ உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்வீர்கள். அப்படி தயார் படுத்திக் கொள்வதற்கான முதல் அடிப்படை கல்லூரியில் இருந்து பட்டத்தை பெறுவது.எதிர்காலத்தில் எதிர்பார்க்க முடியாத ஏதேனும் பிரச்சினைகள் வரும்போது, அதனை எதிர்கொள்வதற்கு தேவையான அறிவையும் மனமுதிர்ச்சியும்; இந்த கல்லூரி பருவம் பெற்று தரும்.நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களையும், எங்களுடைய அனுபவங்களையும் சொல்வது எங்களின் கடமையாகும். இந்த நிகழ்ச்சியின் நோக்கமும் இது தான். தமிழ்நாடு அரசின் கல்லூரி பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய அரசு அலுவலர்கள் நேரடியாக சென்று கல்லூரிகளுக்கு முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று, அவர்களுக்கு நலத்திட்டங்கள் பற்றியும், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இன்றைக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை பற்றி எடுத்து சொல்லவேண்டும். நான்கு சுவர்களுக்குள் இருப்பது தான் உலகம் என்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. பாரதியார் இதனை “பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார்.” என்று பெண்களின் முக்கியத்துவத்தை பற்றி கூறியிருக்கிறார்.

Jul 09, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  (8.7.2024) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள எரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும்,  மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி /குளம் / கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்றும், இதன்மூலம் இவர்கள் பயன்பெறுவதோடு, ஏரி / குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரைச் சேமித்திட இத்திட்டம் உதவும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12.06.2024 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இத்திட்டத்தினை எளிமையாக செயல்படுத்திட தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ல் அரசு ஆணை எண்.14, இயற்கை வளங்கள் துறை, நாள். 12.06.2024 அன்று திருத்தம் செய்யப்பட்டு, இணையதளம் (tnesevai.tn.gov.in) மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக வட்டாட்சியர்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த வட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர் /உதவி இயக்குநர், வட்டாட்சியர்கள், கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் பொறுப்பாளர்களுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்திட வழிகாட்டும் நெறிமுறைகள் இயற்கை வளங்கள் துறையால் 25.06.2024 அன்று வெளியிடப்பட்டது.இத்திட்டத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கி இன்று தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, இன்று விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,  I A S., அவர்கள்  10 விவசாய பெருமக்களுக்கு  விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண்ணை கட்டணமின்றி எடுத்து செல்வதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்தில் 49 நீர்நிலைகளும், சிவகாசி வட்டத்தில் 11 நீர்நிலைகளும், இராஜபாளையம் வட்டத்தில் 44 நீர்நிலைகளும், காரியாபட்டி வட்டத்தில் 16 நீர்நிலைகளும், திருச்சுழி வட்டத்தில் 47 நீர்நிலைகளும், விருதுநகர் வட்டத்தில் 13 நீர்நிலைகளும், சாத்தூர் வட்டத்தில் 28 நீர்நிலைகளும் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 46 நீர்நிலைகளும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 17 நீர்நிலைகளும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 12 நீர்நிலைகளும் என மொத்தம் 283 நீர் நிலைகள் இனம் கண்டறியப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.எனவே, இன்று முதல் விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்கள், சந்தேகங்கள் அல்லது புகார்களுக்கு  9442236488 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இந்நிகழ்வில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன்,சிவகாசி சார் ஆட்சியர்  திருமதி ந.ப்ரியா ரவிசந்திரன்,இ.ஆ.ப., இணை இயக்குநர் (வேளாண் மற்றும் உழவர் நலத்துறை) திருமதி கே.விஜயா, உதவி இயக்குநர் ( புவியல் மற்றும் சுரங்கத்துறை) திருமதி ஜி.சண்முகவள்ளி, பொதுமக்கள், விவசாய பெருமக்கள், அரசு அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 09, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில் (08.07.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில் விண்ணப்பம் அளித்த மனுதார்களுக்கு முஸ்லிம் மகளிர் உதவி சங்கம்  சார்பில், மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 90 பயனாளிகளுக்கு தலா ரூ.8300/- மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.12,500/- வீதம் என மொத்தம் 91 பயனாளிகளுக்கு ரூ.7,59,500/- இலட்சம்  மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், 28 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் உதவித்தொகைகளையும் மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.20,000/- வீதம் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.3,00,000/- இலட்சம் மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலைகளையும்,மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவி சங்கம் சார்பில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 41 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் மற்றும் 12 பயனாளிகளுக்கு ரூ.15,000/- வீதம் என மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலைகளையும்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.72,000 வீதம் இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மற்றும் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.60,000/- வீதம் என 7 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4,68,000/- மதிப்பலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினையும்  என ஆக மொத்தம் 181 பயனாளிகளுக்கு ரூ.25,27,500 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

Jul 09, 2024

”மக்களுடன் முதல்வர்”

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,” கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண  அறிவுறுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.”மக்களுடன் முதல்வர்” திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில்  வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டது.        விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய  பகுதிகளில் 69 முகாம்கள் நடத்தப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்”  முகாம்கள் நடத்தப்பட உள்ளது.  தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது, இதற்காக,  15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம்  காணப்பட்டுள்ளன.                        மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட . அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும். அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும். மேலும், இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறும், மாவட்ட ஆட்சித் தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S.அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Jul 09, 2024

விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும்; (ஆண் / பெண்) இருபாலரும் 15.07.2024 அன்று வரை நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/ அருப்புக்கோட்டை/ சாத்தூர்/திருச்சுழி 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் 13.06.2024 முடிய வரவேற்கப்பட்டது. தற்போது 01.07.2024 முதல் 15.07.2024 முடிய நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண்/பெண்) 15.07.2024 முடிய நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளின் விபரம் பொருத்துநர் (Fitter),  கடைசலர் (Turner),  இயந்திர வேலையாள் (Machinist),  கம்மியர் மோட்டார் வண்டி (MMV) குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்தும் தொழில்நுட்பவியலாளர் (R&AC Technician) உட்புற வடிவமைப்பு மற்றும் அலங்காரம் (Interior Design and Decoration) மேலும் தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (Fire Technology and Industrial Safety Management) இப்பிரிவில் சேருவதற்கு மட்டும் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியும், உடற்கூறு தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். (உயரம் 165cm, எடை 52 kg, மார்பு விரிவதற்கு முன் 81cm பின் 85cm ).  மற்றும்  வுயவய  Tata  Technology மூலம் 4.0-வில் துவங்கியிருக்கும் நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய தொழிற்பிரிவுகளின் விபரம் (Advanced CNC Machining Technician), (Mechanic Electric Vehicle),  (Industrial Robotics & Digital Manufacturing) அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.மடிக்கணினி / மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் பெண் பயிற்சியாளர்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 /- உதவித்தொகை.  அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர்/திருச்சுழி ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர Online மூலம் விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் /சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம்.       மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 95788-55154 / 70100-40810 ஆகிய  தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 09, 2024

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவியின் பெயர்:  மூத்த ஆலோசகர் (Senior Counseller)காலிப் பணியிடம்: 1தகுதிகள்:1. முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.2. மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது அதே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவை.3. 24/7 சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள்; மட்டுமே விண்ணப்பிக்கலாம்.4. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker)காலிப் பணியிடம்:  2தகுதிகள்:1. இளநிலை /முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.2. மகளிருக்கான வன்கொடுமை எதிர்த்து இயங்கும் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது  அதே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்கியதில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் தேவை.3. 24/7 சுழற்சி முறையில் பணிபுரிய சம்மதிக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.4. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. 23.07.2024 -க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரிமாவட்ட சமூகநல அலுவலர்மாவட்ட சமூகநல அலுவலகம்மாவட்ட ஆட்சியர் வளாகம்,விருதுநகர் மாவட்டம்.  

Jul 09, 2024

கரிசல்குளம்பட்டி -ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலிபணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையீன் கீழ் இயங்கி வரும் கரிசல்குளம்பட்டி ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பாட பட்டாதாரி ஆசிரியர் பணி காலியிடத்திற்கு மாதம் ரூபாய் 15,000ஃ- என்ற மாததொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிட ஆசிரியர் தேர்வு வாரியம் பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் பணியமர்த்தப்படுவர்.பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியருக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரிய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவருக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலருக்கும் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னூpமை வழங்கப்படும்.மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிகளுக்கான தகுதிவாய்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யப்படுவதுடன் இப்பணி நியமனம்; முற்றிலும் தற்காலியமானதாகும். தற்காலிக பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 10.07.2024 -க்குள் விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ, விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 09, 2024

தையற்பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று அப்பயிற்சி நிறுவனத்தின் மூலம் தையல் இயந்திரம் பெறாதவர்கள் 25.07.2024-க்குள் விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீர்களின் மனைவி / முன்னாள் படைவீரர் விதவை மற்றும் முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள்கள் மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று  அப்பயிற்சி நிறுவனத்தின் மூலம் தையல் இயந்திரம் பெறாதவர்கள் 25.07.2024-க்குள் தையல் பயிற்சி முடித்த சான்றுகளுடன் திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 08, 2024

விருதுநகர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

விருதுநகர்  நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும்  பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (06.07.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் நகராட்சி தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பில் புதிய வகுப்பறையுடன் கூடிய வேதியியல் ஆய்வகம் கட்டப்பட்டு வருவதையும்,பாவாலி சாலை நகராட்சி முஸ்லிம் பள்ளியில் ரூ.90.50 இலட்சம் மதிப்பில் மூன்று வகுப்பறைகள் மற்றும் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.    பின்னர் அங்கு உள்ள அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து, பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, நகராட்சி பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் ஸ்கேட்டி யார்டு அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு உள்ள பூங்காவில் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.பின்னர், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன்,  விருதுநகர் நகராட்சி ஆணையாளர் திருமதி பி.தமிழ்செல்வி, நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

1 2 ... 36 37 38 39 40 41 42 ... 69 70

AD's



More News